தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 12 அக்டோபர், 2020

#CSK அணியின் தோல்விகளால் தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ரசிகர் கைது ! #Dhoni #IPL2020

 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே - சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி நிறைய ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளதால் ரசிகர்கள் சிலர் தோனியின் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

அபுதாபியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. கடந்த சீசன் வரை வெற்றிகரமான அணியாகத் திகழ்ந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பா் கிங்ஸ், இந்த சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடி 4-ல் தோல்வியடைந்துள்ளது. அந்த அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதே தோல்விக்கு காரணம் என விமா்சனம் எழுந்துள்ளது.


இந்நிலையில் CSK அணி மோசமாக விளையாடி வருவதால் கோபமடைந்துள்ள ரசிகர்கள் சிலர் தோனியின் மகள் ஜிவா-வின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பாலியல் ரீதியிலான மிரட்டல்களை விடுத்துள்ளார்கள். அதேபோல தோனியின் மனைவி சாக்‌ஷிக்கும் அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

இவர்களில் ஜிவாவை பாலியல் பலாத்காரம் செய்வதாக கேவலமாக மிரட்டிய 16 வயது இளைஞர் ஒருவரை குஜராத் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகையும் அரசியல்வாதியுமான நக்மா இதுபற்றி ட்விட்டரில் கூறியதாவது:
நம் தேசம் எங்குச் சென்றுகொண்டிருக்கிறது? தோனியின் 5-வது மகளுக்குப் பாலியல் ரீதியிலான மிரட்டல் விடுப்பது கொடுமையாக உள்ளது என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து தோனிக்கும் அவருடைய குடும்பத்துக்கும் ஆதரவாகச் சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதி வருகிறார்கள்.#CSK

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

மீண்டும் சொதப்பிய தோனி & சென்னை | விராட் கோலியின் விஸ்வரூபத்தில் வெற்றியீட்டிய RCB #RCBvCSK #IPL2020


 

துபாய் மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆரோன் ஃபிஞ்ச் 9 பந்துகளில் 2 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்துக் களமிறங்கிய விராட் கோலி, தேவ்தத் படிக்கலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தார். படிக்கல் 34 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஏபி டிவிலியர்ஸ் டக்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். வாஷிங்டன் சுந்தர் (10), ஷிவம் துபே (22) போன்றவர்கள் ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.


மறுமுனையில் விராட் கோலி கடைசிவரை களத்தில் இருந்து 52 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்ததால், பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 169 ரன்கள் சேர்த்தது.


170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, துவக்கத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன் 14 ரன்களும், ஃபாஃப் டூ பிளஸி 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.


அடுத்துக் களமிறங்கிய அம்பத்தி ராயுடு, ஜெகதீசன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியைச் சரிவிலிருந்து மீட்கத் தொடங்கியனர். ஜெகதீசன் 28 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் மகேந்திரசிங் தோனி 10 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், சாம் கரன் டக்-அவுட் ஆனார்.


கடைசி வரைப் போராடிய அம்பத்தி ராயுடு 40 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்களும் சிறப்பாக சோபிக்க தவறியதால், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 132 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.



பெங்களூர் அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் 4 ஓவர்கள் பந்துவீசி 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

சனி, 3 அக்டோபர், 2020

இளம் வீரர்களால் வெற்றியைச் சுவைத்த ஹைதராபாத் ! வயதேறும் வீரர்கள், தடுமாறும் தோனி - மூன்றாவது தோல்வி #CSK க்கு #IPL2020

 நீண்ட நாட்களுக்கு பிறகு மகேந்திரசிங் தோனி பெஸ்ட் பினிஷர் அவதாரம் எடுப்பார் என்று சென்னை ரசிகர்கள் நம்பியிருக்க, அவரும் சென்னையின் துடுப்பாட்ட வீரர்களும்  சில தடுமாற்றங்களை சந்தித்ததால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று வெற்றிபெற்றது.



நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வோர்னர் போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து திரும்பியதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கை ஓங்கியிருந்தது. இருப்பினும், இளைய துடுப்பாட்ட வீரர்கள் பிரியம் கார்க், அபிஷேக் ஷர்மா சிறப்பாக இணைப்பாட்டம் அமைத்து ரன் மழை பொழிந்தனர்.



பிரியம் கார்க் 51* ஓட்டங்களும், அபிஷேக் ஷர்மா 31 ஓட்டங்களும் எடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் எண்ணிக்கையை  164ஆக உயர்த்தினர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரியம் கார்க், தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை கடந்தார். அதேபோல், மற்றொரு இளம் வீரர் அபிஷேக் ஷர்மா இவருடன் இணையை அமைத்து கூட்டாக 77 ரன்களை குவித்தனர்.

கடைசி 4 ஓவர்களில் 53 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர். 

தனது சாதனைக்குரிய 194ஆவது போட்டியில் களமிறங்கிய மகேந்திரசிங் தோனி தொடக்கத்தில் மிகவும் தடுமாறி ஓட்டங்களை குவிக்கத் தவறினாலும், இறுதியில் அதிரடியாக விளையாடினார். நேற்றைய போட்டியில் முன்னரைப் போல பெஸ்ட் பினிஷராக மாறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி நேரத்தில் சந்தித்த சிறு தடுமாற்றத்தால் சென்னை அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


இறுதியாக மொத்தம், 36 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பெற்றுகொண்டார். மகேந்திரசிங் தோனி.

கடைசி வரிசையில் களமிறங்குகிறார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், நேற்றைய போட்டியில் 5ஆவது வீரராகக் களம் கண்டார். ரவிந்திர ஜடேஜாவுடன் இணைந்து 72 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஓட்டங்கள் சேர்த்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 102 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.


கடைசி 18 பந்துகளில் 63 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ரவிந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி இணைப்பாட்டம்  ஆனது அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தது. ரவிந்திர ஜடேஜா அதிரடியாக ஆடிசென்னை அணியை வெற்றிக்கு நெருக்கமாக கொண்டு சென்றனர். 

இருப்பினும், அவர் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், மகேந்திரசிங் தோனி அதிரடி காட்டத் தொடங்கினார். கடைசி இரண்டு ஓவர்களுக்கு 44 ஓட்டங்கள் தேவைப்பட்டது.



புவனேஸ்வர் குமார் 19ஆவது ஓவரின் முதல் பந்தை வீசிய நிலையில், காலில் காயம் ஏற்பட்டு, பெவிலியன் திரும்பினார். இதனால், கலீல் அஹமது மாற்றுப் பந்து வீச்சாளராகச் செயல்பட்டார். அந்த ஓவரில் தோனி ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்ததால், கடைசி ஓவருக்கு 23 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இளம் பந்துவீச்சாளர்  அப்துல் சமதை டேவிட் வோர்னர் இறுதி ஓவருக்காகத் தெரிவு செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை வழங்கியது.

அவர்  சாமர்த்தியமாகப் பந்து வீசி சென்னை அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார்.


மகேந்திரசிங் தோனி முன்கூட்டியே அதிரடி காட்டியிருந்தால், சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்த்திருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தோனியின் வயது முதிர்வும் அவரதும சக முப்பது வயது தாண்டிய சென்னை வீரர்களதும் துடுப்பாட்டத் தடுமாற்றம் தொடர்கிறது.


நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக ப்ரியம் கார்க் தெரிவானார்.

சனி, 26 செப்டம்பர், 2020

ஆப்கான்- நியூஸிலாந்து அணிகளுடனான தொடர்கள் ஒத்திவைப்பு: கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவிப்பு !

 ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடர்களை ஒத்திவைப்பதாக, கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.



ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியிலும், நியூஸிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரிலும் அவுஸ்ரேலிய அணி விளையாடுவதாக இருந்தது.

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினை கருத்திற்கொண்டு குறித்த போட்டித் தொடர்களை பிற்போடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிரிக்கட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

எனினும், இத்தொடர்களை நடத்துவதற்கான மாற்று திகதி தெரிவு செய்வதற்காக ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளின் கிரிக்கெட் சபைகளுடன் ஆலோசித்து வருவதாகவும் கிரிக்கட் அவுஸ்ரேலியா குறிப்பிட்டுள்ளது.

டெல்லிக்கு அசத்தலான வெற்றி - சென்னைக்கு தொடர்ச்சியான தோல்வி #CSKvDC #IPL2020

 இளைய வீரர்களின் அதிரடி துடுப்பாட்டம், அசத்தலான பந்து வீச்சினால் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.



சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. 

நாணய சுழற்சியில் வென்ற சென்னை பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர். பிரித்வி ஷா அரைசதம் அடித்தார் பிரித்வி ஷா. டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 88 ஓட்டங்கள் அடித்தது.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் எடுத்தது. பிரித்வி ஷா 64 , தவான் 35. 



ரிஷப் பண்ட் 34 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 10 ஓட்டங்கள், வொட்சன் 14 ஓட்டங்கள் என்று ஆட்டமிழந்தனர். டூ பிளசிஸ், கேதார் ஜாதவ் ஓரளவு தாக்குப் பிடித்தனர். இந்த ஜோடி 50 ஓட்டங்கள் சேர்த்தது.

ஜாதவ் 26 க்கும் டூ பிளசிஸ் 43 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் வெற்றிக்கு தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்தது. டோனி மீண்டும் தடுமாறியிருந்தார். ஓட்டங்களை வேகமாகப் பெறவேண்டிய நேரத்தில் 15 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.


டெல்லியின் அதிவேக தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்கள் றபாடா & நோர்ட்ஜே 

டெல்லி அணி கட்டுக்கோப்பாக பந்து வீசி அசத்தியது. பீல்டிங்கும் சிறப்பாக செய்தது. இதனால் சென்னை அணி ஓட்டங்கள் எடுக்க முடியவில்லை.

இறுதியில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் இரண்டாவது வெற்றி ஆகும்.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் - ப்ரித்வி ஷா 

பந்துவீச அதிக நேரம் - விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபா அபராதம் ! #RCB #IPL2020


 

ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெங்களூர் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக தலைவர் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன், பெங்களூரு அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி முதலாவதாகவும், பெங்களூரு அணி 2ஆவதாகவும் பேட்டிங் செய்தன.
இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை வீச பெங்களூரு அணி அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக அணியின் தலைவர் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

சச்சின் சாதனையை முறியடித்த K.L.ராகுல்!! #KXIPvRCB #IPL2020

 ஐபிஎல் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 2,000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் வரிசையில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து கே. எல்.ராகுல் முதலிடத்தை பிடித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழும் கே.எல்.ராகுல், தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக 

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக சதம் அடைத்து அசத்தியதுடன், ஐபிஎல் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றையும் அவர் முறியடித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆறு சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 63 இன்னிங்ஸில் 2,000 ரன்களை கடந்து குறைந்த போட்டிகளில் 2,000 ரன்களை கடந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வந்தார். சச்சினின் இந்த சாதனையையே கே.எல். ராகுல் தற்போது முறியடித்துள்ளார்.


பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டி, கே,எல், ராகுலுக்கு 60 ஆவது ஆட்டமாக அமைந்தது. இந்த போட்டியில் சதமடைத்ததன் மூலம் அவர் 2,000 ரன்களை கடந்தார். அத்துடன், ஐபிஎல் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 2000 ரன்களை கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் சச்சினை பின்னுக்குத்தள்ளி ராகுல் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.


குறைந்த போட்டிகளில் 2,000 ரன்களை கடந்த முதல் 5 இந்திய வீரர்கள்:

கே.எல் ராகுல் (60), சச்சின் டெண்டுல்கர் (63), கௌதம் காம்பீர் (68), சுரேஷ் ரெய்னா (69), வீரேந்திர சேவாக் (70)

வியாழன், 24 செப்டம்பர், 2020

தோனியின் ஆட்டம்: கெவின் பீட்டர்சன் காட்டம்! #CSK #IPL2020

 ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக 217 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி 7ஆவது வீரராக களம் கண்டார். அவர் முன்கூட்டியே களமிறங்கியிருக்க வேண்டும் எனப் பலர் விமர்சித்து வந்த நிலையில், அந்த வரிசையில் கெவின் பீட்டர்சனும் இணைந்துள்ளார்.


மிகப்பெரிய இலக்கைத் துரத்தி தோல்வி கண்டது எல்லாம் போட்டிகளில் இயல்பாக நடக்கக்கூடிய விஷயம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக தோனி 7ஆவது வரிசையில் களம் கண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிக விமர்சனங்களையும் அது பெற்றுத்தந்தது. தோனியின் இந்த முடிவுக்கு விரேந்திர சேவாக் 10க்கு 8 மதிப்பெண்கள் கொடுத்த நிலையில், கெவின் பீட்டர்சனும் தனது மதிப்பீடுகளை வழங்கியுள்ளார். டி20 போட்டிகளில் 217 ரன்களை துரத்தி வெற்றி பெறுவது சாதாரணம் கிடையாது. ஆனால், தோனி இதை அசால்டாக எடுத்துக் கொண்டு 7ஆவது வரிசையில் களம் கண்டது ஏற்கதக்கத்து அல்ல என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.


“தற்போது ஐபிஎல் தொடர் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது. அதனால், தோனி எடுத்த முடிவை ஒரு பரிசோதனையாகப் பார்க்கலாம். ஒன்னு மட்டும் சொல்றேன், டி20 கிரிக்கெட் கண்ணிமைக்கும் நேரத்தில் பல அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தக் கூடியது. என்ன நடந்தது என்று ஆராய்வதற்குள் அடுத்தடுத்து 5 தோல்விகள் வரிசை கட்டி நிற்கும். இது இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை கூடப் பறித்துவிடும். தோனி எடுத்த முடிவைப் போன்று நான் ஒருபோதும் எடுக்க மாட்டேன்” என தனியார் தொலைக்காட்சியில் கிரிக்கெட் தொடர்பாக பேசும்போது பீட்டர்சன் கூறினார்.


ராஜஸ்தானுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி ! #RajasthanRoyals #IPL2020

 ராஜஸ்தானுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி ! #RajasthanRoyals #IPL2020

தற்போது நியூசீலாந்தில் தனது சுகவீனமுற்றுள்ள தந்தையாரோடு இருக்கும் இங்கிலாந்தின் சகலதுறை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் அடுத்த வாரம் ஐக்கிய அரபு அமீரகம் வந்து சேருவார் என்றும், Rajasthan Royals அணிக்காக அடுத்த வாரம் முதல் போட்டிகளில் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டோக்ஸ் இல்லாமலேயே முதலாவது போட்டியில் ராஜஸ்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிகொண்டிருந்தது.


திங்கள், 31 ஆகஸ்ட், 2020

IPL 2020 திட்டமிட்டபடி தொடங்க முடியுமா? CSK அணி பற்றி சவுரவ் கங்குலி சந்தேகம்!

 IPL 2020 திட்டமிட்டபடி தொடங்க முடியுமா? CSK அணி பற்றி சவுரவ் கங்குலி சந்தேகம்!



கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் தொடரில் மேலும் சிக்கல்கள் எழுந்துள்ளன.

துபாயில் மருத்துவ பாதுகாப்பு வட்டத்திற்குள் இருக்கும் சென்னை அணியினர் 13 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுபற்றி பேசியுள்ள, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே திட்டமிட்டபடி பயணிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள ஐபிஎல் தொடருக்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா உறுதியானது. சுரேஷ் ரெய்னாவும் அவசர அவசரமாக நாடு திரும்பினார். இதனால், சென்னை அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்குமா என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியான தகவலில் சென்னை அணியினருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. 

எத்தனை பேருக்கு கொரோனா ஏற்பட்டது என்று தெளிவாகத் தெரியாத நிலையில் சிஎஸ்கேவில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது. தற்போது, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சென்னை அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றி தற்போது பேச விரும்பவில்லை. ஐபிஎல் தொடரில் CSK திட்டமிட்டபடி பயணிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் போதுமான நாட்கள் இருக்கின்றன. அதற்குள், நிலைமை சரியாகிவிடும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

சென்னை அணிக்கு நெருக்கமானவரிடம் இருந்து புதுத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. “ஆகஸ்ட் 15 முதல் 20 வரை நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாமல் இருந்த ஹர்பஜன் சிங், தற்போது உள்ள சூழ்நிலையில் துபாய் செல்வது கடினம். ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை அணியில் 13 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், ஹர்பஜன் சிங் போல, வெளிநாட்டு வீரர்களும் துயாய் செல்வதைத் தவிர்ப்பதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், துபாயில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரபூர்வமாக பிசிசிஐ அறிவித்துள்ளது. “ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஐபிஎல் குழுவினருக்கு கொரோனா பரிதோசனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வீரர்கள், ஊழியர்கள் மற்றும் அணி உரிமையாளர்கள் என மொத்தம் 1,988 பேருக்கு ஆகஸ்ட் 20 முதல் 28 வரை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.”

“அதில் 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். IPL மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் முடியும் வரை தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் பாரபட்சமா? ஏன் நாடு திரும்பினார் சுரேஷ் ரெய்னா?

 சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் பாரபட்சமா? ஏன் நாடு திரும்பினார் சுரேஷ் ரெய்னா?



சுரேஷ் ரெய்னா எதற்காக நாடு திரும்பினார் என்பது பற்றி அணி நிர்வாகம் சரியான விளக்கம் இதுவரை அளிக்கப்படவில்லை. தற்போது  துபாயில் தங்குவதற்கு அளிக்கப்பட்ட அறை திருப்தி அளிக்காததால் தான், சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

மகேந்திரசிங் தோனிக்கு அளிக்கப்பட்டது போன்ற அறையை ரெய்னா கோரியதாகவும், அதற்கு அனுமதி அளிக்காததால் ரெய்னா இந்தியா திரும்பியதாகவும் கூறப்படுகிறது. அவசரவசரமாக ரெய்னா நாடு திரும்பியதும் ஏனைய வீரர்களுடன் தோனி ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தவுடன் தனது ஓய்வையும் ரெய்னா அறிவித்திருந்தார்.

எனினும் தோனிக்கு நெருக்கமான வட்டாரங்கள் ரெய்னா கொரோனா பயத்தினாலேயே தாம் சமாதானம் செய்து நிறுத்தியும் நாடு திரும்பியதாக தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.

இதேவேளை சென்னை சூப்பர் கிங்க்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ரெய்னா வீணாக தனது சம்பளமான பெருந்தொகையை (இந்திய மதிப்பில் 11 கோடி ரூபாவை ) இழக்கப்போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் ரெய்னா தொடர்ந்து மௌனம் சாதித்துவருவதால் சென்னை ரசிகர்கள் குழம்பியிருக்கிறார்கள்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

இந்தியாவின் அதியுயர் விருதுகள் பெறவிருக்கும் மூன்று ஷர்மாக்களுக்கு BCCI புகழாரம்!

 மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னாஅர்ஜூனா விருதுகள் வழங்கப்படும். சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டுத் துறையின் வாழ்நாள் சாதனையாளர் ‘தயான் சந்த்’ விருது வழங்கப்படுகிறது.


இந்த விருதுகளைப் பெறுவதற்கு மொத்தம் மூன்று கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் பிசிசிஐ புகழாரம் சூட்டியுள்ளது.

பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், “ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெறும் நான்காவது கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவுக்கு வாழ்த்துக்கள். ஹிட் மேன்...உங்களால் பிசிசிஐ பெருமையடைகிறது” என்று பதிவிட்டுள்ளது.

தீப்தி ஷர்மாவுக்கும் பிசிசிஐ சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அர்ஜூனா விருது பெறவிருக்கும் தீப்தி ஷர்மாவுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள, இந்திய அணியின் மூத்த வீரர் இஷாந்த் ஷர்மாக்கு, பிசிசிஐ வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அர்ஜூனா விருது பெறவிருக்கும் மூத்த வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து வெற்றி நடைபோடுங்கள்” என்று தெரிவித்துள்ளது.

மற்ற விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்கும் கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தொடரில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, ரோஹித் ஷர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பாத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கனை ராணி ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


மூத்த கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மா, வீராங்கனை தீப்தி ஷர்மா, தடகள வீராங்கனை டூட்டி சந்த், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மானு பாகேர் ஆகியோர் உட்பட 27 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட உள்ளது.

விருதுகள் அனைத்தும் வருகிற ஆகஸ்ட் 29ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இணைய வழி நிகழ்ச்சி மூலம் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

IPL 2020 News - ஐபிஎல்: முதல் 3 போட்டிகளில் 29 வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்!

 இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள், டி20 போட்டிகள் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடக்கிறது. இதனால் குறிப்பிட்ட போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் துபாய்க்கு தாமதமாக  வந்து சேர்வார்கள் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


ஐபிஎல் போட்டியில் காலமதாமதாக களமிறங்கபோகும் பிசிசிஐ வெளியிட்டுள்ள பட்டியலில், ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கரன், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் செப்டம்பர் 26ஆம் தேதிக்கு மேல் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார்கள் என பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ஏஜஸ் பெளலில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையிலான காலத்தில் 3 டி20 போட்டிகள் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து செப்டம்ர் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி காலத்தில் 3 ஒருநாள் போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க உள்ள ஐபிஎல் வீரர்கள், போட்டி முடிந்தவுடன் துபாய் புறப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இங்கிலாந்திலிருந்து குறிப்பிட்ட ஐபிஎல் வீரர்கள் செப்டம்பர் 17, 18 தேதிகளில் துபாய்க்குப் புறப்படுவர்.

துபாய் சென்றடையும் வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். அதன்பின் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னரே சம்பந்தப்பட்ட நபர் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

அதன்படி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்க உள்ள டேவிட் வார்னர், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டீவ் ஸ்மித் உள்பட 29 வீரர்கள் முதல் 3 ஐபிஎல் போட்டிகளை தவறவிட நேரிடும்.

ஜோஸ் பட்லர், ஸ்மித், ஆர்ச்சர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் முதல் 3 போட்டிகளை விளையாட வேண்டிய நெருக்கடி ராஜஸ்தான் ராயல் அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து–ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் பாதுகாப்பு விதிமுறைகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படும். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் வீரர்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி லண்டன் சென்றடைகின்றனர்.

சனி, 15 ஆகஸ்ட், 2020

M.S.தோனி ஓய்வு !

 M.S.தோனி ஓய்வு !


இன்றிரவு 7.29இல் இருந்து தன்னை ஓய்வு பெற்ற வீரராகக் கருதிக்கொள்ளுமாறு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் தோனி தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்த தோனி ஒருநாள், T20 போட்டிகளில் ஆடி வந்திருந்தார்.
எதிர்வரும் செப்டம்பர் 18 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள IPL போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக விளையாடவுள்ள தோனி, சென்னையில் இன்று ஆரம்பமான பயிற்சி முகாமில் பங்குபற்றியிருந்தார்.
இந்த அறிவிப்பு மூலம் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலிருந்தும் தோனி ஓய்வு பெறுகிறார்.

தோனியின் ஓய்வு அறிவிப்பையடுத்து சில நிமிடங்களிலேயே அவரது தளபதியாகக் கருதப்படும், சென்னை சூப்பர் கிங்ஸில் அவரோடு சேர்ந்து நீண்ட காலம் விளையாடிவரும் சுரேஷ் ரெய்னாவும் தனது சர்வதேச ஓய்வை அறிவித்தார்.



Related Posts Plugin for WordPress, Blogger...