Latest Updates

6/recent/ticker-posts

பந்துவீச அதிக நேரம் - விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபா அபராதம் ! #RCB #IPL2020


 

ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெங்களூர் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக தலைவர் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன், பெங்களூரு அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி முதலாவதாகவும், பெங்களூரு அணி 2ஆவதாகவும் பேட்டிங் செய்தன.
இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை வீச பெங்களூரு அணி அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக அணியின் தலைவர் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்