தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து கொண்டனர்.. களை கட்டப்போகும் லோர்ட்ஸ்

இம்மாதம் 31 ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள நிதி திரட்டும் கண்காட்சிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ள உலக அணியில் இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து கொண்டுள்ளார்கள்.



இங்கிலாந்தின் ஒயின் மோர்கனின் தலைமையில் விளையாடுவதற்கு ஏற்கெனவே ஆறு சர்வதேச நட்சத்திரங்கள் தமது பங்கேற்பை உறுதிப்படுத்தியிருந்தனர்.

உலக அணியில் இணைந்துகொள்ளும் மேலும் மூன்று நட்சத்திரங்கள் !!!

ICC உலக அணிக்குத் தலைவராகும் இங்கிலாந்து அணித் தலைவர் ஒயின் மோர்கன்

இன்னும் மூன்று சர்வதேச நட்சத்திரங்கள் யார் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரீபியன் தீவுகளில் இர்மா, மரியா ஆகிய புயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டவே இந்த T20 போட்டி நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டிக்கு ICC உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வ.சோழன் - நல்லூர், யாழ்ப்பாணம் 

கருத்துரையிடுக

புதியது பழையவை