தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 9 ஏப்ரல், 2018

கோலி, டீ வில்லியர்ஸ் ஆகியோருடன் சேர்ந்து விளையாடக் கொடுத்து வைத்திருக்கவேண்டும் - பிரென்டன் மக்கல்லம்

டி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலியுடன் இணைந்து விளையாடுவது அற்புதமான அனுபவம் என பெங்களூரு அணியின் தொடக்க வீரரான, முன்னாள் நியூசீலாந்து அணித் தலைவர் பிரென்டன் மக்கலம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.



ரோயல் சலஞ்சர்ஸ் அணியின் தலைவர் கோலி மற்றும் டிவில்லியர்சை புகழ்ந்த மக்கல்லம் இவர்கள் இருவரோடும் விளையாடுவதால் மூலம் தன்னுடைய துடுப்பாட்ட நுட்பங்களை மேலும் விருத்தி செய்துகொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார் மக்கலம்.

கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி மற்றும் டிவிலியர்ஸ் ஜோடி இணைந்து சிறப்பாக விளையாடினார்கள். எனினும் மக்கலம் எடுத்துக்கொடுத்த அதிரடி ஆரம்பத்தை விட கோலியின் துடுப்பாட்டம் மிக மந்த கதியிலேயே இருந்தது.


பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி கொக் மற்றும் மக்கல்லம் களமிறங்கினர்.
டி கொக் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து காலத்தில் இறங்கிய தலைவர் கோலி மற்றும் மக்கல்லம் ஜோடி இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.பின்னர் மெக்கலம் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து களத்தில் விராட் கோலி மற்றும் டிவிலியர்ஸ் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பெங்களூரு அணிக்கு ஒரு பக்க பலமாக அமைந்தது.விராட் கோலி 33 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரானா பந்தில் ஆட்டம் இழந்தார்.


 எனினும் டீ வில்லியர்ஸ் மற்றும் மக்கலம் ஆகியோரின் விரைவான 40+ ஓட்டங்களே நேற்று RCB ஓரளவுக்காவது கௌரவமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற உதவியிருந்தன.


சென்னை G.பிரசாத் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...