தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

செவ்வாய், 3 ஜூலை, 2018

இலங்கைக்கு ICC எச்சரிக்கை !!


Sri Lanka Cricket - ஸ்ரீலங்கா கிரிக்கெட் எனப்படும் இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நடத்தப்படாவிட்டால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்புரிமை பறிக்கப்பட நேரிடும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

டப்லினில் நேற்று நடைபெற்ற ஐசிசியின் வருடாந்த சந்திப்பின் போது, எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தேர்தல் விவகாரமும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, தற்போதைக்கு ஐசிசியின் இலங்கை பிரதிநிதியாக செயற்பட முடியும்.

எனினும் இந்த நிலை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாது எனவும், இன்னும் 6 மாதங்களுக்குள் இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்  தேர்தல் நடத்தப்படாவிட்டால், ஐசிசி வழங்கியுள்ள உறுப்புரிமை தொடர்பில் ஆராயப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே நிலையை பாகிஸ்தான், சிம்பாப்வே மட்டுமன்றி  Associate அந்தஸ்து நாடுகளின் சபைகளுக்கும் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது சுட்டிக்காட்டத் தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...