தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

தோனி ஓய்வு ??!! சென்னையின் தலைவராகிறார் ஷேன் வொட்சன் ?? - #IPL2018


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான மகேந்திரசிங் தோனி, அடுத்த போட்டியில் அல்லது இரு போட்டிகளில் ஓய்வு எடுக்க கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஞாயிறு இரவு இடம்பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், கடுமையான முதுகு வலியால் பாதிக்கப்பட்ட தோனி, அணியின் வெற்றியை கருத்திற்கொண்டு இறுதி வரை களத்தில் போராடிஇருந்தும் அணியினால் வெற்றியைப் பெறவைக்க முடியவில்லை.

இந்தத் தோல்விக்கு தோனி எடுத்த சில தவறான முடிவுகளும் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவரது முதுகுவலி குணமடையும் வரை ஓரு வார காலத்திற்கு ஒய்வில் இருக்கும் படி மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது.
படம் :sports.ndtv.com

சென்னையின் அடுத்த போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிராகவும், பின் ஞாயிற்றுக்கிழமை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகவும் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் தோனி அடுத்த போட்டியில் ஓய்வெடுக்க கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு தோனி ஓய்வெடுக்கும் பட்சத்தில் அணியின் தலைவராக ஷேன் வோட்சன் அணித்தலைவராக செயல்பட வாய்ப்பு உள்ளது.

சுரேஷ் ரெய்னாவும் உபாதையிலிருந்து முற்றாகக் குணமடையாத நிலையில் தோனியும் ஓய்வு எடுப்பது சென்னை அணியை இன்னும் பலவீனமடையச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை G.பிரசாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...