தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 1 அக்டோபர், 2018

முதலிடத்துக்கு முன்னேறிய ரஷீத் கான் ! ஒருநாள் போட்டிகளில் தொடரும் கோலி, பும்ரா & இந்தியாவின் ஆதிக்கம்

ஆசியக் கிண்ணப்போட்டிகள் முடிவடைந்ததையடுத்து சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் புதிய ஒருநாள் தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலியும், பந்துவீச்சில் இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ராவும் தத்தமது முதலாமிடங்களை தக்க வைத்துள்ள அதே நேரத்தில், இந்தியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்து வைத்துள்ள முதலாமிடத்தை நெருங்குவதற்கு மேலும் ஒரு புள்ளியை மேலதிகமாகப் பெற்றுள்ளது.
பாகிஸ்தானும் இலங்கையும் புள்ளிகளை இழந்திருக்கும் அதேவேளை, ஆப்கானிஸ்தான் ஐந்து புள்ளிகளை பெற்று தனக்கு மேலேயுள்ள மேற்கிந்தியத் தீவுகளை நெருங்கியுள்ளது.

இதேவேளை சகலதுறை வீரர்க்கான பட்டியலில் துரிதமான முன்னேற்றம் கண்டு முதலாமிடத்தைத் தன் வசப்படுத்தியுள்ளார் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான். ரஷீத் கான் பந்துவீச்சாளர் பட்டியலிலும் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

இந்த ஆசியக் கிண்ணத்தின்போது காட்டிய திறமைகளின் அடிப்படையில்
இந்திய வீரர்கள் பலர் தரப்படுத்தலில் முன்னேற்றங்களைக் கண்டுள்ளனர்.

துடுப்பாட்ட வீரர்களில் ரோஹித் ஷர்மா, ஷீக்கார் தவான் ஆகியோரும், பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் பங்களாதேஷின் முஸ்டபிஸ்சுர் ரஹ்மானும் முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.

இப்போது ஆரம்பித்துள்ள தென் ஆபிரிக்க - சிம்பாப்வே ஒருநாள் தொடரும், அடுத்து நடைபெறவுள்ள இலங்கை - இங்கிலாந்து தொடரும் அணிகளின் தரப்படுத்தலில் இன்னும் மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய வாய்ப்புள்ளது.

முழுமையான தரப்படுத்தல்கள் :




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...