தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

புதன், 5 செப்டம்பர், 2018

இந்திய அணியிலே விளையாடத் தகுதியற்ற அந்த மூன்று வீரர்களும் யார் ?


இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி  இழந்துள்ளது.  இந்திய அணியின் மோசமான துடுப்பாட்டத்தால் தான் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது.

இந்தத் தொடரில் விராட் கோலி, புஜாரா, ரஹானே மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகியோரைத் தவிர மற்ற யாரும் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா மூன்றாவது டெஸ்ட் போட்டியை தவிர மற்ற எந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை.

இந்த தோல்விக்கு பிறகு, கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய அணியின் தலைவர் சுனில் கவாஸ்கர், பாண்டியாவை கடுமையாக தாக்கியிருந்தார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சுனில் கவாஸ்கர் கூறியதாவது ' நீங்கள் ஹர்திக் பாண்டியாவை சகலதுறை வீரர் என அழைக்க விரும்புகிறீர்களா? யார் யாரெல்லாம் பாண்டியாவை சகலதுறை வீரர் என அழைக்க விரும்புகிறீர்களோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் தான் அவரை சகலதுறை வீரராக நினைக்கவில்லை என்றும்
தான்  பாண்டியாவை மட்டும் விமர்சிக்கவில்லை. இந்திய அணியில் விளையாடுவதற்கே தகுதியில்லாத சில வீரர்கள் தற்போதைய அணியில் உள்ளனர். அவ்வாறு  மூன்று வீரர்கள்  உள்ளனர். அவர்களை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அணியிலிருந்து என்றால் ஆடும் பதினொருவரில் இருந்து மட்டுமல்ல; வீரர்கள் ஓய்வறையில் கூட உட்கார வைக்கக்கூடாது. மொத்தமாக அணியிலிருந்தே நீக்க வேண்டும். அவர்கள் மீண்டும் கடின உழைப்பின் மூலம் அணியில் இடம்பெற போராட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த வீரர்கள் யார் யார் என்று கவாஸ்கர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இப்போது தவான், பான்ட், விஜய், கார்த்திக், ராகுல் என்று ரசிகர்களின் ஊகங்கள் பலவிதமாக அமைந்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...