தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

சனி, 24 மார்ச், 2018

கோலியின் கோடி ரூபாய் பெறுமதியான வீட்டுக்கு நடந்தது என்ன?

இந்திய அணியின் தலைவர் விராட் கோலி பதிவுசெய்திருந்த 34 கோடி (இந்திய ரூபாய்) பெறுமதியான சொகுசு தொடர் மாடி குடியிருப்பொன்றை திடீரென இரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மும்பையின் வோர்லி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் அதி உயர் சொகுசு உயர்மாடி கட்டிடமான ஒம்கார் 1973 என்ற தொடர்மாடி கட்டிடத்தின் 35வது மாடி கட்டிடத்தை விராட் கோலி, தனது காதல் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் கொள்வனவு செய்வதற்காக பதிவுசெய்திருந்தார்.

எனினும் தற்போது குறித்த தொடர் மாடி கட்டிடத்தை வாங்க மறுத்துள்ள கோலி, குறித்த பதிவினையும் இரத்து செய்துள்ளார்.
குறித்த சொகுசு தொடர் மாடி குடியிருப்பை விராட் கோலி கடந்த வருடம் பதிவுசெய்திருந்தார். குறித் கட்டிடமானது அதி உயர் சொகுசு மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்புடன் அமைக்கப்படுவதுடன், ஒவ்வொரு குடியிருப்பும் வாங்குபவர்களின் விருப்பத்திற்கேற்ப சில மாற்றங்களும் செய்து கட்டமைக்கப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த தொடர் மாடி குடியிருப்பை தவிர்த்துள்ள கோலி, திருமணத்துக்கு பின்னர் மும்பையில் உள்ள ரெஹேஜா லெஜன் என்ற சொகுசு தொடர் மாடி குடியிருப்பின் 40வது மாடியை மாதம் 15 இலட்சம் ரூபாவுக்கு வாடகைக்கு எடுத்துள்ளார்.

இதேவேளை இந்திய அணியின் மற்றுமொரு வீரரான யுவராஜ் சிங், விராட் கோலி ரத்துசெய்த ஒம்கார் 1973 கட்டிடத்தின் 29வது மாடியை 2016ம் ஆண்டு பதிவுசெய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி ரத்துச் செய்த காரணத்தை அறிந்துகொள்ள அந்தத் தொடர்மனையில் ஏற்கெனவே வீடுகளைப் பதிவு செய்துகொண்டவர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
இதற்குப் பின்னர் அந்த சொகுசுத் தொடர் மாடி வீடுகளின் விற்பனை பாதிக்கப்படுமோ என்றும் கட்டட ஒப்பந்தக்காரர்கள் அஞ்சுகிறார்கள்.

- சென்னை G.பிரசாத் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...