தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

ஞாயிறு, 3 ஜூன், 2018

இன்னிங்சினால் வெற்றி ! பாகிஸ்தானைப் பழி தீர்த்து தொடரை சமப்படுத்திய இங்கிலாந்து !


மூன்றாம் நாளான இன்றே முடிவுக்கு வந்தது லீட்ஸ் - எட்ஜபாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி.
முதல் நாள் முதல் ஆதிக்கம் செலுத்திவந்த இங்கிலாந்து இன்னிங்சினாலும் 55 ஓட்டங்களினாலும் இந்தப் போட்டியில் வெற்றியைப் பெற்றது.
இதன்மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்று சமநிலையில் முடிவடைந்தது.

174 ஓட்டங்களுக்கு பாகிஸ்தானை முதலாவது இன்னிங்சில் சுருட்டிய இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்கள், இரண்டாவது இன்னிங்சில் வெறும் 134 ஓட்டங்களுக்கு பாகிஸ்தானின் அனைத்து விக்கெட்டுக்களையும் அள்ளியெடுத்தனர்.
அதுவும் 46 ஓவர்களில்.

இங்கிலாந்து தனது ஒரே இன்னிங்சில் 363 ஓட்டங்களைப் பெற்றது.
IPL இல் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காகத் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியபின்னர் இத்தொடருக்காக மீள அழைக்கப்பட்ட ஜொஸ் பட்லர் கலக்கலாக ஆடி ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைப் பெற்றார்.

இரண்டாம் இன்னிங்சிலும் துடுப்பாட்டத்தில் தடுமாறிய பாகிஸ்தான் அணி சார்பாக இருவர் மட்டுமே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுக்கொண்டனர்.
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இமாம் உல் ஹக் 34, இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான உஸ்மான் ஸலாஹுதீன் 33.

ஸ்டூவர்ட் ப்ரோட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் டொம் பெஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

கடந்த போட்டிக்குப் பின்னர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான ப்ரோட் இந்தப் போட்டியின் முதல் நாளுக்குப் பின்னர் மைக்கல் வோன் உட்பட்ட விமர்சனங்களுக்குப் பதில் அளித்தது போல இன்றும் கலக்கியிருந்தார்.

பெஸ் துடுப்பாட்டத்தில் 49 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக பட்லர் தெரிவாகிய அதே நேரம், தொடரின் சிற்ப்பாட்டக்காரராக தொடரில் 10 விக்கெட்டுக்களை வீழ்த்திய மொஹமட் அப்பாஸ் தெரிவாகினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...