தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 12 ஏப்ரல், 2018

ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இல்லை ! UAEக்கு மாற்றம் !!

கோலாலம்பூரில் உள்ள ஆசிய கிரிக்கெட் சபையில், நிறைவேற்று வாரியத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி இந்திய மற்றும் பாகிஸ்தானிய அரசாங்கங்களுக்கிடையில் இன்னமும் முறுகல் நிலை தொடர்வதால், இந்தியாவில் நடைபெறவிருந்த ஆசியக் கிண்ண தொடரை இம்முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக பாகிஸ்தானின் பங்கேற்பும் உறுதிப்படுத்தப்படுகிறது. BCCIயும் இந்த முடிவுக்கு இணங்கியுள்ளது.

இதன்படி ஆசிய அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகளோடு ஆறாவது அணியாகத் தெரிவாகும் ஒரு புதிய அணி என ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ண தொடர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறாவது அணி அண்மையில் ஒருநாள் சர்வதேச அந்தஸ்தைத் தாமதாக்கிய நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, சிங்கப்பூர், ஓமான் மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெறும் தெரிவுப்போட்டியில் இருந்து ஒரு அணி தெரிவாகும்.

இது 14வது ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடராகும். கடந்த ஆசியக் கிண்ணத் தொடரைத் தவிர எண்ணிய அனைத்தும் 50 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே இடம்பெற்றிருந்தன.

கடந்த 2016ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற T 20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்திய அணி சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

வ.சோழன் - யாழ்.நல்லூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...