Latest Updates

6/recent/ticker-posts

உலக அணியில் இணைந்துகொள்ளும் மேலும் மூன்று நட்சத்திரங்கள் !!!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ICC உலக அணி விளையாடவுள்ள நிதி திரட்டும் கண்காட்சிப் போட்டியில் உலக அணிக்காக விளையாடவுள்ள மேலும் மூன்று நட்சத்திரங்கள் தமது வரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த வருடம் இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகளின் சில இடங்களைப் புனரமைக்க நிதி திரட்டும் முகமாக எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சி T20 போட்டிக்கு சர்வதேச அந்தஸ்தும் சர்வதேச  சபையினால் (ICC) வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஒயின் மோர்கன் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் பாகிஸ்தானின் ஷஹீத் அப்ரிடி, ஷொயிப் மாலிக், இலங்கையின்  சகலதுறை வீரர் திஸர பெரேரா ஆகியோர் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தனர்.

இப்போது உலகின் முதல் நிலை T20 சர்வதேசப் பந்துவீச்சாளராக விளங்கும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், பங்களாதேஷின் முன்னணி நட்சத்திரங்கள் ஷகிப் அல் ஹசன் மற்றும் தமீம் இக்பால் ஆகியோரும் தமது பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒரு நற்காரியத்துக்கு நிதி திரட்டும் இந்தப் போட்டிகளுக்கு  ICC மிகவும் திருப்தி தெரிவித்துள்ளது.

கார்லோஸ் ப்ரத்வெயிட்டின் தலைமையில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிரபல நட்சத்திரங்கள் கிறிஸ் ஜெயில், மார்லன் சாமுவேல்ஸ், சாமுவேல் பத்ரி, அன்றே ரசல் போன்றோர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்