தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

உத்தப்பா தான் எங்கள் அதிரடி ஆயுதம் - KKR தலைவர் தினேஷ் கார்த்திக்

எத்தனை சர்வதேச நட்சத்திரங்கள் இருந்தாலும், ரொபின் உத்தப்பா தான் எங்கள் அணியின் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் என, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில், கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் பின் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவிக்கையில்,

இரு தோல்விகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றி பெற்றதை சிறப்பாக உணர்கிறேன். எங்களது பந்துவீச்சு மிகவும் நன்றாக இருந்தது. ரொபின் உத்தப்பாவின் துடுப்பாட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் எங்கள் அணியின் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் ஆவார். இதே போல ராணாவும் நன்றாக விளையாடினர்.

ஐ.பி.எல். நீண்ட போட்டித் தொடர். இதனால் வீரர்கள் நிலைத்து துடுப்பெடுத்தாடுவது அவசியமானதாகும். எஞ்சிய போட்டிகளிலும் வீரர்கள் இதே திறமையுடன் விளையாடுவார்கள் என்று நம்புகிறேன்’ என கூறினார்.

இப்போட்டியில், 36 பந்துகளை எதிர்கொண்ட உத்தப்பா, 2 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடங்களாக 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.


சென்னை G.பிரசாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...