தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

செவ்வாய், 12 ஜூன், 2018

இந்தியாவை விட மிகச் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் எம்மிடம் உள்ளார்கள் - ஆப்கன் அணியின் தலைவர் #INDvAFG

 நாளை மறுதினம் பெங்களூருவில் ஆரம்பிக்கவுள்ள சரித்திரபூர்வ கன்னி டெஸ்ட் போட்டியை மிகத் துணிச்சலாக எதிர்கொள்ளத் தாம் தயார் என்று அறிவித்துள்ள ஆப்கானிஸ்தானிய அணியின் தலைவர் அஸ்கர் ஸ்டானிக்சாய் இந்திய அணியின் பலம் மற்றும் அனுபவம் பற்றித் தாம் அறிந்திருந்தாலும் இந்தியாவை விட தமது அணியிலே மிகச்  சிறந்த சுழல்பந்து வீச்சாளர்கள் இருப்பதாகப் பிரகடனம் செய்திருக்கிறார்.

உலக டெஸ்ட் தரப்படுத்தலில் நான்காம், ஐந்தாம் இடங்களிலுள்ள அஷ்வின், ஜடேஜா ஆகியோரை விட இன்னும் டெஸ்ட் அரங்கில் விளையாடாத, ஆனால் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் மிக முன்னணியில் விளங்குபவரும் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை அள்ளி வருபவருமான ஆப்கன் சுழல் புயல் ரஷீத் கான், இளைய சுழல் பந்துவீச்சு நட்சத்திரம் முஜிபுர் ரஹ்மான், சகலதுறை வீரரும் ஒப் ஸ்பின் பந்துவீச்சாளருமான மொஹமட் நபி, மற்றும் ரஹ்மத் ஷா, ஸாக்கிர் கான் ஆகியோர் ஐவரும் ஐந்துவிதமான அற்புத சுழல்பந்து நுட்பங்களைக் கொண்டவர்கள் என்று நம்பிக்கையோடு ஆப்கன் அணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.



இது இந்திய விளையாட்டு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சிறு சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலத்தில் ஆச்சரியப்படும் விதத்தில் பெரிய அணிகளை சர்வதேசப் போட்டிகளில் வீழ்த்தி வரும் ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் தற்போது டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வியைப் பரிசளிக்குமா என்பதே மிகப்பெரிய கேள்வி..

இப்போது ஆப்கானிஸ்தான் பெங்களூருவில் மிக மும்முரமாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...