தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

செவ்வாய், 29 மே, 2018

கன்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு சுழல் வலை விரிக்கும் ஆப்கானிஸ்தான் !

எதிர்வரும் (ஜூன்) மாதம் பெங்களூருவில் இந்திய அணியைத் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் சந்திக்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணி தன்னுடைய 16 பேர் கொண்ட குழாமை அறிவித்துள்ளது.
சர்வதேச அனுபவம் வாய்ந்த அஸ்கர் ஸ்டனிக்சாயின் தலைமையில் அனுபவ வீரர்கள் பலரையும் உள்ளடக்கியுள்ள இவ்வணியில் உலகின் தற்போதைய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானுடன் மேலும் மூன்று சுழல்பந்து வீச்சாளர்கள் பெயரிடப்பட்டுள்ளார்கள்.

ரஷீத் கானுடன் IPL இல் விளையாடிய மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மான், மற்றும் 19 வயதான சஹீர் கான் (ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் பெயரிடப்பட்டும் உபாதை காரணமாக விளையாட முடியாமல் போனது), உள்ளூர்ப் போட்டிகளில் கூடிய விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய அமீர் ஹம்சா ஆகியோரே மற்றையவர்கள்.

சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் தவ்லத் சட்ரானை உபாதை காரணமாக இழக்கவுள்ள ஆப்கான் அணி, பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்தியாவில் நொய்டாவில் விளையாடவுள்ள 3 T 20 போட்டிகளுக்கு புதியவர்களையும் இளையவர்களையும்  சேர்த்துள்ளது.

இந்த அணிக்கும் அஸ்கர் ஸ்டனிக்சாயே தலைமை தாங்கவுள்ளார்.
வருகின்ற 3ஆம் திகதி முதல் இம்மூன்று போட்டிகளும் இடம்பெறவுள்ளன.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...