தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

புதன், 6 ஜூன், 2018

மீண்டும் ரஷீத் + நபி அதிரடி - பங்களாதேஷைப் பந்தாடி சரித்திரம் படைத்த ஆப்கனிஸ்தான் !!

மீண்டும் ரஷீத் கான் + மொஹமட் நபி ஆகியோரின் இணைப்பில் ஆப்கானிஸ்தான் தம்மை விட சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் சிரேஷ்ட அணியான பங்களாதேஷை உருட்டியெடுத்து இரண்டாவது T 20 சர்வதேச போட்டியிலும் வெற்றியீட்டி தொடரைத் தம் வசப்படுத்தியுள்ளது.


இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி , ஆப்கானிஸ்தான் சுழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தமிம் இக்பால் ஒருபக்கம் நிலைத்து நிற்க, மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய வீரர்கள் மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, தொடர்ச்சியாக ஆட்டமிழந்து திரும்பினர்.

ஆரம்பத்தில் மொஹமட் நபியும் பின்னர் ரஷீத் காணும் தங்கள் சூழலில் பங்களாதேஷை திக்குமுக்காட வைத்திருந்தனர்.

இறுதியாக தமிம் இக்பால் 43 ஓட்டங்களையும் அபு ஹய்டர் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணிசார்பில் சிறப்பாக பந்து வீசிய ரஷீட் கான், 16வது ஓவரில் சகிப் அல் ஹசன், தமிம் இக்பால் மற்றும் மொஷ்டாக் ஹுசைன் ஆகியோரின் விக்கட்டுகளை வீழ்த்தியதுடன், 4 ஓவர்கள் பந்து வீசி 12 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்தினார். மறுமுனையில் மொஹமட் நபி 19 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்டத்திற்கான இணைப்பாட்ம் மெதுவாக நகர்ந்தாலும், சிறப்பாக இருந்தது.
மொஹமட் சேஷாட் 24 ஓட்டங்களையும், உஸ்மான் கஹானி 21 ஓட்டங்களையும் பகிர்ந்துக்கொண்டனர்.

தொடர்ந்து களமிறங்கிய சமியுல்லா ஷென்வாரி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படு்த்திக்கொண்டிருக்கையில், அணித்தலைவர் அஸ்கர் ஸ்டனிஸ்காய்  வந்த வேகத்தில் நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஷென்வாரி 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் நின்ற மொஹமட் நபி அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் தொடர் வெற்றியை உறுதிசெய்தார்.

பங்களாதேஷ் அணியின் மொஷ்டாக் ஹுசைன் 21 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-0 என கைப்பற்றியுள்ளனர். அதுமாத்திரமின்றி இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் T20  தொடரை கைப்பற்றிய பெருமையையும் ஆப்கானிஸ்தான் அணி பெற்றுக்கொண்டது.

முதற்போட்டியைப் போலவே நேற்றைய போட்டியிலும் சிறப்பாட்டக்காரராக ரஷீத் கான் தெரிவானார்.

மூன்றாவதும் இறுதியான போட்டி நாளை இதே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...