தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

தொடர் தோல்விகள்.. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிரடி முடிவு

அண்மைக்காலத் தொடர்ச்சியான தோல்விகளையடுத்து  வீரர்களின் ஒப்பந்தத்தை மாற்றியமைத்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, 6 வீரர்களை அதிரடியாக ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியுள்ளது.


தனியே பத்து வீரர்களை மட்டுமே ஒப்பந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது.
வீரர்கள் போட்டியில் சோபிக்க தவறியதாலேயே அவர்களை நீக்கியுள்ளதாக விளக்கம் அளித்துள்ள கிரிக்கெட் சபை, ஒப்பந்தத்தில் விடுபட்ட வீரர்களின் கதவு முழுவதுமாக அடைக்கப்படவில்லை என கூறியுள்ளது.
சௌமிய சர்க்கர், இம்ருல் கெய்ஸ், மொசாடெக் ஹொசைன், சபீர் ரஹ்மான், தஸ்கின் அஹமட், கம்ருல் இஸ்லாம் ஆகிய ஆறு வீரர்களையே பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, புதிய ஒப்பந்தத்தில் புறக்கணித்துள்ளது.
எனினும் அவர்கள் உள்ளூர் மட்ட போட்டிகளிலும், T20 லீக் போட்டிகளிலும் விளையாடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஷ்ரபே மோர்டாசா, தமிம் இக்பால், மஹ்முதுல்லா ரியாத், மொமினுல் ஹக், ருபல் ஹொசைன், முஸ்டபிசுர் ரஹ்மான், தைஜூல் இஸ்லாம், மெஹதி ஹசன் ஆகியோர் மட்டுமே புதிய ஓப்பந்தத்தில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...