IPL 2020 திட்டமிட்டபடி தொடங்க முடியுமா? CSK அணி பற்றி சவுரவ் கங்குலி சந்தேகம்!
திங்கள், 31 ஆகஸ்ட், 2020
IPL 2020 திட்டமிட்டபடி தொடங்க முடியுமா? CSK அணி பற்றி சவுரவ் கங்குலி சந்தேகம்!
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் பாரபட்சமா? ஏன் நாடு திரும்பினார் சுரேஷ் ரெய்னா?
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் பாரபட்சமா? ஏன் நாடு திரும்பினார் சுரேஷ் ரெய்னா?
சுரேஷ் ரெய்னா எதற்காக நாடு திரும்பினார் என்பது பற்றி அணி நிர்வாகம் சரியான விளக்கம் இதுவரை அளிக்கப்படவில்லை. தற்போது துபாயில் தங்குவதற்கு அளிக்கப்பட்ட அறை திருப்தி அளிக்காததால் தான், சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மகேந்திரசிங் தோனிக்கு அளிக்கப்பட்டது போன்ற அறையை ரெய்னா கோரியதாகவும், அதற்கு அனுமதி அளிக்காததால் ரெய்னா இந்தியா திரும்பியதாகவும் கூறப்படுகிறது. அவசரவசரமாக ரெய்னா நாடு திரும்பியதும் ஏனைய வீரர்களுடன் தோனி ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தவுடன் தனது ஓய்வையும் ரெய்னா அறிவித்திருந்தார்.
எனினும் தோனிக்கு நெருக்கமான வட்டாரங்கள் ரெய்னா கொரோனா பயத்தினாலேயே தாம் சமாதானம் செய்து நிறுத்தியும் நாடு திரும்பியதாக தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.
இதேவேளை சென்னை சூப்பர் கிங்க்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ரெய்னா வீணாக தனது சம்பளமான பெருந்தொகையை (இந்திய மதிப்பில் 11 கோடி ரூபாவை ) இழக்கப்போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் ரெய்னா தொடர்ந்து மௌனம் சாதித்துவருவதால் சென்னை ரசிகர்கள் குழம்பியிருக்கிறார்கள்.
செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020
இந்தியாவின் அதியுயர் விருதுகள் பெறவிருக்கும் மூன்று ஷர்மாக்களுக்கு BCCI புகழாரம்!
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கப்படும். சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டுத் துறையின் வாழ்நாள் சாதனையாளர் ‘தயான் சந்த்’ விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளைப் பெறுவதற்கு மொத்தம் மூன்று கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் பிசிசிஐ புகழாரம் சூட்டியுள்ளது.
பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், “ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெறும் நான்காவது கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவுக்கு வாழ்த்துக்கள். ஹிட் மேன்...உங்களால் பிசிசிஐ பெருமையடைகிறது” என்று பதிவிட்டுள்ளது.
தீப்தி ஷர்மாவுக்கும் பிசிசிஐ சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அர்ஜூனா விருது பெறவிருக்கும் தீப்தி ஷர்மாவுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள, இந்திய அணியின் மூத்த வீரர் இஷாந்த் ஷர்மாக்கு, பிசிசிஐ வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அர்ஜூனா விருது பெறவிருக்கும் மூத்த வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து வெற்றி நடைபோடுங்கள்” என்று தெரிவித்துள்ளது.
மற்ற விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்கும் கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தொடரில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, ரோஹித் ஷர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பாத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கனை ராணி ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மா, வீராங்கனை தீப்தி ஷர்மா, தடகள வீராங்கனை டூட்டி சந்த், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மானு பாகேர் ஆகியோர் உட்பட 27 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட உள்ளது.
விருதுகள் அனைத்தும் வருகிற ஆகஸ்ட் 29ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இணைய வழி நிகழ்ச்சி மூலம் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழன், 20 ஆகஸ்ட், 2020
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020
திங்கள், 17 ஆகஸ்ட், 2020
IPL 2020 News - ஐபிஎல்: முதல் 3 போட்டிகளில் 29 வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்!
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள், டி20 போட்டிகள் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடக்கிறது. இதனால் குறிப்பிட்ட போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் துபாய்க்கு தாமதமாக வந்து சேர்வார்கள் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஐபிஎல் போட்டியில் காலமதாமதாக களமிறங்கபோகும் பிசிசிஐ வெளியிட்டுள்ள பட்டியலில், ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கரன், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் செப்டம்பர் 26ஆம் தேதிக்கு மேல் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார்கள் என பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, ஏஜஸ் பெளலில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையிலான காலத்தில் 3 டி20 போட்டிகள் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து செப்டம்ர் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி காலத்தில் 3 ஒருநாள் போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்க உள்ள ஐபிஎல் வீரர்கள், போட்டி முடிந்தவுடன் துபாய் புறப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இங்கிலாந்திலிருந்து குறிப்பிட்ட ஐபிஎல் வீரர்கள் செப்டம்பர் 17, 18 தேதிகளில் துபாய்க்குப் புறப்படுவர்.
துபாய் சென்றடையும் வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். அதன்பின் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னரே சம்பந்தப்பட்ட நபர் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்.
அதன்படி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்க உள்ள டேவிட் வார்னர், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டீவ் ஸ்மித் உள்பட 29 வீரர்கள் முதல் 3 ஐபிஎல் போட்டிகளை தவறவிட நேரிடும்.
ஜோஸ் பட்லர், ஸ்மித், ஆர்ச்சர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் முதல் 3 போட்டிகளை விளையாட வேண்டிய நெருக்கடி ராஜஸ்தான் ராயல் அணிக்கு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து–ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் பாதுகாப்பு விதிமுறைகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படும். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் வீரர்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி லண்டன் சென்றடைகின்றனர்.
சனி, 15 ஆகஸ்ட், 2020
M.S.தோனி ஓய்வு !
M.S.தோனி ஓய்வு !