தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

ஆசியக் கிண்ணம் - ICCயினால் ஹொங் கொங்கிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்


இந்தமுறை ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரின் அனைத்து ஒருநாள் போட்டிகளுக்கும் சர்வதேச ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படவுள்ளது என்ற அறிவித்தலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறது.

சர்வதேச கிரிக்கட் அந்தஸ்தை பெற்றுள்ள  அணியும் அந்தஸ்து இல்லாத அணியும் விளையாடும் போட்டிகளுக்கு சர்வதேச ஒருநாள் அந்தஸ்தை வழங்குவதில் கடந்த காலங்களில் சிக்கல் இருந்து வந்தது.


எனினும் இனிவரும் காலங்களில் இவ்வாறான கலப்பு போட்டிகள் அனைத்திற்கும் சர்வதேச ஒருநாள் அந்தஸ்தினை வழங்க ICC தீர்மானித்திருக்கிறது.

இந்த கொள்கைமாற்றத்தின் அடிப்படையில் பலன்பெறுகின்ற முதலாவது தொடராக எதிர்வரும் ஆசியக் கிண்ணத் தொடர்  இருக்கும் என்பதோடு ஒருநாள் அந்தஸ்து இல்லாத நிலையிலும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ள போட்டிகள் ஹொங் கொங் அணிக்கு சர்வதேசப் போட்டிகளாகத் தரவுகளில் சேர்க்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதேநேரம் இந்த தொடரில் பங்கேற்கின்ற ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஏனைய 5 அணிகளும் டெஸ்ட் அந்தஸ்த்து உடைய அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இனி மேலும் நடைபெறும் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளின் போதும் இதே நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...