துடுப்பால் சிக்கலில் மாட்டியுள்ள தோனி !!

இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனிக்கும் சர்ச்சைக்கும் என்ன தான் பொருத்தமோ, அடிக்கடி சிக்கல்களில் சிக்கிக் கொள்ளும் தோனி இப்போது சிக்கலில் அகப்பட்டிருப்பது துடுப்பினால். அவர் பயன்படுத்தும் துடுப்பால் புதிய சிக்கல் ஒன்று உருவாகி உள்ளது.

பிரபல துடுப்பு தயாரிப்பு நிறுவனமான ஸ்பார்டன் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் துடுப்புகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இவர்களுடன் மட்டுமன்றி சர்வதேச ரீதியில் இன்னும் பல பிரபல வீரர்களுடனும் ஒப்பந்தங்களை செய்துள்ளது.

எனினும் அண்மைக்காலமாக ஸ்பார்டன் நிறுவனம் வீரர்களுக்கு வழங்க வேண்டிய ஒப்பந்தத் தொகையை உரிய நேரத்தில் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இங்கிலாந்து அணியின் ஒரு நாள் மற்றும் T 20 போட்டிகள் அணிக்கான தலைவர் ஒயின் மோர்கன், அவுஸ்திரேலிய முன்னாள் வீரர்  மிட்செல் ஜோன்சன், அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஜோ பேர்ன்ஸ், மேற்கிந்திய அதிரடி நட்சத்திரம் கிறிஸ் கெய்ல் போன்றோர் ஸ்பார்டன் நிறுவன துடுப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் சரியான நேரத்தில் தொகை அவர்களுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

இத்தனை வீரர்களுக்கான ஒப்பந்தப் பிரச்சினை தொடரும் நிலையில் தோனி இன்னும் தான் பயன்படுத்தும் துடுப்புகளில் ஸ்பார்டன் நிறுவன ஸ்டிக்கரையே ஒட்டியுள்ளார்.
தற்போது பணப் பிரச்னை எழுந்துள்ள நிலையிலும் தோனி இன்னும் ஸ்டார்பன் நிறுவனத்திற்கு ஆதரவாக அந்த ஸ்டிக்கரை பயன்படுத்துவது அவருக்கு ஒரு சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.
தோனிக்கு மட்டும் ஒப்பந்தப் பணம் ஒழுங்காக வழங்கப்படுகிறதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இந்தியாவில் ஜலந்தரை சேர்ந்த தொழிலதிபர்  குணால் ஷர்மா.ஆனால் இந்த   ஸ்பார்டன் நிறுவனத்தின்  இணை உரிமையாளர்  தோனி  என்றும் பரவலாகப் பேசப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே தோனி ரகசியமாக வீரர்களை ஒப்பந்தம் செய்யும் முகாமைத்துவ நிறுவனங்களிலும் பங்குதாரராக இருப்பதாக சொல்லப்பட்டு வருவதும் கவனிக்கவேண்டிய விடயமாகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை