தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

அசத்தல் சதமடித்து நிரூபித்த விராட் கோலி !!

இங்கிலாந்துக்கு எதிராக தற்போது எட்ஜ்பாஸ்டனில் இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் நேற்று அசத்தலான சதமடித்து தன்னை இங்கிலாந்து மண்ணிலும் வைத்து நிரூபித்துள்ளார் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி.

தன்னைச் சுற்றி விக்கெட்டுக்கள் இழக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்திலும் கூட திடமாக நின்று ஆடி இங்கிலாந்து மண்ணில் தன்னுடைய முதலாவது சதத்தைப் பூர்த்தி செய்தார் கோலி.
இது அவர் டெஸ்ட் போட்டிகளில் பெற்றுள்ள 22வது சதமாகும்.

கடந்த இங்கிலாந்து சுற்றுலாவின்போது 10 இன்னிங்சில் 134 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்த கோலி, நேற்று தன்னுடைய ஒரே இன்னிங்சில் அசத்தலாக 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

In 2014 faced 288 balls, scored 134 runs in 10 innings. In 2018 faced 225 balls, scored 149 runs in one innings!

இந்திய அணியின் தலைவராக தன்னுடைய முதலாவது இன்னிங்சிலேயே இங்கிலாந்து மண்ணில் சதமடித்த இரண்டாவது வீரராக சாதனை படைத்துள்ளார்.
1990இல் மொஹமட் அசாருதீன் 121 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இந்திய அணி மொத்தமாக எடுத்த 274 ஓட்டங்களில் பாதிக்கும் மேலே கோலி குவித்த லாவகமும் எல்லா இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்களுக்கு மற்ற எல்லா இந்தியத் துடுப்பாட்ட வீரர்களும் தடுமாறிய நேரம் லாவகமாக கோலி ஆடிய விதமும் உலகம் முழுவதும் ஏராளமான பாராட்டுக்களை கோலிக்கு பெற்றுக்கொடுத்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...