தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

ஞாயிறு, 3 ஜூன், 2018

மீண்டும் அணியில் தனஞ்சய டீ சில்வா ! உடனடியாக மேற்கிந்தியத் தீவுகள் பயணமாகிறார்.


தனது தந்தையாரின் படுகொலையை அடுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணித்த இலங்கை அணியிலிருந்து விலகிக்கொண்ட இலங்கை அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டீ சில்வா மீண்டும் இலங்கை அணியோடு இணைந்து கொள்ளவுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.

உடனடியாக மேற்கிந்தியத் தீவுகளுக்குப் புறப்படும் தனஞ்சய டீ சில்வா நாளை இரவு அளவில் மேற்கிந்தியத் தீவுகள் போய்ச் சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதுள்ள மனநிலையில் அவர் புதன்கிழமை ஆரம்பிக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இவர் விளையாடுவது சந்தேகம் எனினும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உறுதி.

தந்தையார் கொலையுண்டதை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் இவரை ஓய்வெடுக்க அனுமதித்ததுடன் மனநிலை திடப்பட்ட பின்னர் எந்தவேளையில் விரும்பினாலும் சேர்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது. அத்துடன் இவருக்குப் பதிலாக அணியில் வேறெந்த வீரரையும் சேர்த்திருக்கவில்லை.

தனஞ்சய அண்மைக்காலத்தில் இலங்கையின் டெஸ்ட் அணியில் மூன்றாம் இடத்தில் சிறப்பாக ஆடி வந்திருக்கிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...