தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

ஞாயிறு, 27 மே, 2018

தோனியின் சென்னையா? வில்லியம்சனின் ஹைதராபாத்தா? மும்பாயில் #IPL2018 இறுதிப் பலப்பரீட்சை - இன்றிரவு #IPLFinal

IPL 2018 இறுதிப்போட்டி இன்றிரவு !


Play off சுற்றின் முதற்போட்டியில் வென்று இன்றைய இறுதிப்போட்டிக்குத் தெரிவான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், கடந்த வெள்ளிக்கிழமை இறுதி Play off போட்டியில் கொல்கத்தாவின் சவாலை முறியடித்து தெரிவாகியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதவுள்ளது.

புள்ளிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் அணி, முன்பு தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த டேவிட் வோர்னரின் இன்மை தெரியாமல், கேன் வில்லியம்சனின் நேர்த்தியான தலைமைத்துவம் மற்றும் துடுப்பாட்டத்தினால் திடமான அணியாகத் தெரிகிறது.

இரண்டு வருட காலத் தடைக்கு பின்னர் ஐ.பி.எல். தொடரில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலமான அணியாக வெளிவந்துள்ளது.

இந்த சீசனுடன் ஆறாவது இறுதிப்போட்டியில் கால் பதிக்கும் சென்னை அணி, தங்களது மூன்றாவது கிண்ணத்தை குறிவைத்து களமிறங்கவுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் சம்பியன் கிண்ணத்தை சென்னை அணி 2 தடவை கைப்பற்றியுள்ளதுடன், ஹைதராபாத் அணி ஒரு தடவை சுவீகரித்துள்ளது.

இந்த IPL சீசனில் இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற மூன்று போட்டிகளின் அடிப்படையில், சென்னை அணி ஆதிக்கத்தை செலுத்துகின்றது.

இம்முறை மூன்று போட்டிகளில் ஹைதராபாத் அணியை எதிர்காண்ட சென்னை அணி மூன்று போட்டிகளிலும் வெற்றியை தக்கவைத்துள்ளது.

தோல்வியடைந்து அழுத்தத்திற்குள்ளாகியுள்ள ஹைதராபாத் அணி இன்று சென்னையை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.


இரண்டு அணிகளையும் பொறுத்தவரையில் சென்னை அணிக்கு தங்களது துடுப்பாட்ட வரிசையின் பலமும், ஹைதராபாத் அணிக்கு பந்து வீச்சு பலமும் அதிகமாகவுள்ளது.

எனினும் இறுதியாக இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது குவாலிபையர் போட்டியில் சென்னை அணியின் துடுப்பாட்ட வரிசையை சன்ரைசர்ஸ் அணி தடுமாற வைத்திருந்தது. எவ்வாறாயினும் டுபிளசி சென்னை அணியின் வெற்றியை இறுதியில் உறுதிசெய்திருந்தார்.

இதனால் இன்று சென்னை அணி சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பாட்டி ராயுடு, தோனி ஆகியோர் மீது கூடுதல் கவனமிருக்கும்.

ஹைதராபாத் அணிக்கு துடுப்பாட்ட வரிசை சவாலாக உள்ளது.
செம்மஞ்சள் தொப்பியை தன் வசம் வைத்துள்ள கேன் வில்லியம்சன் அசுரர் formஇல் இருக்கிறார். 700 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய இன்னும் 12 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.
தவான் மற்றும் வில்லியம்ஸன் மாத்திரம் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, மத்தியவரிசையில் பிராத்வைட் மற்றும் சகிப் அல் ஹசன் சிறிய அளவில் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். எனினும் இன்று அனைவரும் தத்தம் பங்களிப்பை சிறப்பாக நல்குவர் என நம்பப்படுகிறது.

சென்னை அணியின் கடைசி நேரப் பந்துவீச்சு இன்னும் திடப்படவேண்டும். ங்கிடி மற்றும் சஹர் ஆகியோர் மீது தம் நம்பிக்கையை CSK ரசிகர்கள் வைத்துள்ளார்கள். மறுபக்கம் ரஷீத் கான் இந்தப் போட்டியையும் சுழற்றி மாற்றக்கூடியவராகத் தெரிகிறார்.

எவ்வாறாயினும் இன்று இறுதிப்போட்டி, வேறு வாய்ப்புகள் இல்லை. போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே கிண்ணம் என்ற ரீதியில், அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயற்பட வேண்டும். அப்படி இருந்தால் மாத்திரமே அணியாக வெற்றிக்கொள்ள முடியும்.

கிண்ணம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வந்த சென்னை அணிக்கா? அல்லது வில்லியம்ஸன் தலைமையிலான ஹைதராபாத் அணிக்கா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இறுதிப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை G பிரசாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...