தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

புதன், 25 ஏப்ரல், 2018

IPL 2018இன் முதல் பலி ! கம்பீர் பதவி விலகினார்.

தொடர்ச்சியான தோல்விகள் தந்த அழுத்தமும் மோசமான துடுப்பாட்ட formஉம் சேர்ந்து டெல்லி டெயார்டெவில்ஸ் அணித் தலைவர் பதவியைத் துறப்பதாக கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார்.

டெல்லி அணி விளையாடியுள்ள ஆறு போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.

கம்பீரின் துடுப்பாட்டமும் மிக மோசமான நிலையைக் காட்டியுள்ளது. 5 இன்னிங்க்சில் 85 ஓட்டங்கள்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக இரு தடவை IPL கிண்ணங்கள் வென்ற கம்பீர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது சொந்த ஊர் திரும்பியிருந்தார். அதுவும் தலைவராக. ரசிகர்களும் டெல்லி அணி உரிமையாளர்களும் மிகவும் எதிர்பார்த்திருந்தனர்.

ரிக்கி பொன்டிங் பயிற்றுவிப்பாளர், மக்ஸ்வெல், போல்ட், மொறிஸ், கிறிஸ்டியன் போன்ற சர்வதேச வீரர்கள், ஆற்றல் கொண்ட இளம் வீரர்கள் என்று பலமான அணியாகவே டெல்லி இருக்கிறது.

எனினும் ஒரேயொரு வெற்றி தான்.
தனி நபர்களாக பலர் சிறப்பாக விளையாடினாலும் அணியாக வெற்றிகளைப் பெற முடியவில்லை.
கம்பீரும் கடந்த போட்டியில் மிக மனம் சோர்ந்தவராகவே காணப்பட்டார்.

இப்போது 23 வயதான இளம் டெல்லி விரர் ஷ்ரெயாஸ் ஐயர் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். பயிற்றுவிப்பாளர் பொன்டிங் தன்னுடைய முழு ஆதரவை வழங்கியுள்ளார்.

பார்க்கலாம், டெல்லியின் அதிர்ஷ்டம் மாறுகிறதா என்று..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...