Latest Updates

6/recent/ticker-posts

ஐபிஎல் கிரிக்கெட் - நட்பின் பாலம் - சென்னை, மும்பாய் பூனேயில் சங்கமம்

பூனேயில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பாய் இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக இரு அணி வீரரும் மைதானத்தில் பயிற்சிகளுக்காகக் கூடியபோது பல நெகிழ்வான காட்சிகள் பதிவாகின.


கிரிக்கெட்டில் போட்டி தான் உள்ளதே தவிர குரோதமோ, கோபமோ மோதலோ இல்லை என்பதை CSK மற்றும் மும்பாய் வீரர்கள் வெளிப்படுத்தி ஆரத்தழுவியும் அன்பாய்ப்பேசியும் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தினர்.

சென்னைத் தலைவர் தோனியும் மும்பாய் இந்தியன்ஸ் பயிற்றுவிப்பாளர், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவும் அளவளாவியதும், தோனியிடம் மும்பாயின் இளம் வீரர்கள் வந்து ஆலோசனைகள் பெற்றதும் மகிழ்வான காட்சிகள்.




மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்கள் பிராவோவும் பொல்லார்டும் சில கலகலப்பு நிமிடங்களை வழங்கினர்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்