தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

சந்திமால், அகில தனஞ்செய இல்லை ; ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை அணிக்குப் பின்னடைவு ??

ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது முதல் லசித் மாலிங்கவின் மீள் இணைப்புப் பற்றி மகிழ்ச்சியடைந்திருந்த இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரிடியாக இரண்டு விடயங்கள் இப்போது வெளியாகியுள்ளன.

ICC தடைக்குப் பின்னர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ள டெஸ்ட் தலைவர் தினேஷ் சந்திமால் விரல் முறிவு காரணமாக ஆசியக் கிண்ணத் தொடர் முழுவதிலுமே விளையாட முடியாத நிலை தோன்றியுள்ளது.
இந்தக் காயம் காரணமாகவே கடந்த ஞாயிறு நடைபெற்ற SLCT20 இறுதிப் போட்டியிலும் கொழும்பு அணிக்குத்  தாங்கியிருக்கவில்லை.
தினேஷ் சந்திமாலுக்கு அண்மையில் நடந்து முடிந்த SLCT20 போட்டிகளின் பொது ஏற்பட்ட விரல் உபாதையின் காரணமாக சிலவேளை தொடரிலிருந்தே விலகவேண்டி வரலாம்.
சந்திமாலினால் பூரண உடற்தகுதியைப் பெறமுடியாது போகும்பட்சத்தில் சந்திமாலுக்குப் பதிலாக நிரோஷன் டிக்வெல்ல அணியில் இடம்பெறுவார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
அத்துடன் அண்மைக்காலத்தில் இலங்கையின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளராக நம்பிக்கை பெற்றுவரும் அகில தனஞ்செயவின் மனைவியின் முதலாவது குழந்தையின் பிரசவ காலம் என்பதால் முதல் இரு போட்டிகளில் தனஞ்செய விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழமையாக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடும் டில்ருவான் பெரேராவை இந்தக் குழாமில் சேர்த்ததற்கான காரணம் உணர்த்தப்பட்டுள்ளது.
ஆசியக் கிண்ணத்தில், இலங்கை அணிக்கு முதலாவது போட்டி 15ஆம் திகதி பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும், 17ஆம் திகதி இரண்டாவது போட்டி ஆப்கனிஸ்தானுக்கு எதிராகவும் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு அணிக்குமே தலா இரண்டு போட்டிகள் மட்டுமே என்பதால் அடுத்த சுற்றான சூப்பர் 4க்கு அதிக புள்ளிகளோடு சொல்வதாயின் ஒவ்வொரு போட்டிகளையும் வெல்லவேண்டியிருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...