தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 3 மே, 2018

லசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு !! IPLஆ? இலங்கையா? தெரிவு அவரது கையில்


இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, மீண்டும் இலங்கை தேசிய அணிக்குள் உள்வாங்கப்படுட வேண்டுமானல் நேற்று ஆரம்பமாகியுள்ள SLC Super Four ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என SLC - ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கான லசித் மாலிங்க, தேசிய அணியில் கடந்தாண்டு செப்டம்பர் முதல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

இதனால் தனது பந்து வீச்சை நிரூபிப்பதாகவும், நடைபெறவுள்ள தென்னாபிரிக்க தொடரில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பகிரங்கமாகவும் மாலிங்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  ஆரம்பமாகியுள்ள உள்ளூர் ஒருநாள் தொடரில் மாலிங்க அவரது திறமையை நிரூபிப்பதன் மூலமே அவர் அணியில் இணைய முடியும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட்  தெரிவித்துள்ளது.
எனினும் மாலிங்க ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் மும்பாய்  இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்டு வருகின்றார். ஐ.பி.எல். போட்டிகள் இம்மாத இறுதியிலேயே முடிவடைகின்றன.

இதனால் மாலிங்க இலங்கை வருவதில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலிங்க தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால,

“தேர்வுக்குழுவினர் மாலிங்க இலங்கை வந்து போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என விரும்புகின்றனர். நாம் இங்கு ஒருநாள் மற்றும் T -20 தொடர்களை ஏற்பாடு செய்துள்ளோம். அடுத்து நடைபெறவுள்ள தென்னாபிரிக்க தொடர் மற்றும் ஆசிய கிண்ணம் என்பவற்றுக்கான அணி வீரர்கள் தேர்வுகள் இடம்பெறவுள்ளன. உள்ளூர் தொடரில் சிறப்பாக செயற்படும் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் வழங்கப்படும். லசித் மாலிங்க உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டால் தேர்வுக்குழு மாலிங்கவை அணியில் இணைக்கும்” என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மாலிங்க தற்போது மும்பாய் இந்தியன்ஸ் அணியுடன் இருப்பதாகவும் இடைநடுவே அதை விட்டுவிட்டு இலங்கை திரும்ப முடியாதென்றும் நேற்று தெரிவித்துள்ளார். தான் ஜனவரி - பெப்ரவரி மாதங்களில் நடந்த உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் லசித் மாலிங்க 17 விக்கெட்டுக்களை எடுத்தும் சுதந்திரக் கிண்ணப் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை என்பது கவனிக்கவேண்டியது.

இப்போது பந்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் மாலிங்கவிடம் கொடுத்துள்ளது. IPL, மும்பாய் இந்தியன்ஸ் ஆகியவற்றைக் கைவிட்டு மாலிங்க இலங்கை வருவாரா என்பதும் அவ்வாறு விளையாட வந்தாலும் இங்கே சோபிப்பாரா என்பதும் அவ்வாறே அவர் சிறப்பாக விளையாடினாலும் இலங்கைத் தேர்வாளர்கள் அணியில் சேர்ப்பார்களா என்பதும் கேள்விக்குரியவையே...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...