தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 24 மே, 2018

ABD ஓய்வு !! கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி !!! உண்மையான காரணம் தெரியுமா?



ABD ஓய்வு !! கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி !!! உண்மையான காரணம் தெரியுமா?



நேற்றிலிருந்து இப்போது வரை கிரிக்கெட் உலகத்தையே பெபட வைக்கிற விடயமும் பல ரசிகர்களை ஆழ்ந்த கவலையில் மூழ்கடித்துள்ள விடயமும் இது தான்...

360 என்று அனைத்து ரசிகர்களாலும் அன்போடு அழைக்கப்படும் தென் ஆபிரிக்க கிரிக்கெட் நட்சத்திரம் ஏபி டீ வில்லியர்ஸின் ஓய்வுச் செய்தி தான் அது.

அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.

34 வயதான டி வில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை ட்விட்டரில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


நான் களைப்படைந்து விட்டேன். அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெற முடிவெடுத்து விட்டேன். இது உடடினயாக நடைமுறைக்கு வருகிறது. 114 டெஸ்ட் போட்டி, 228 ஒருநாள் போட்டி 78 T 20 சர்வதேச போட்டிகளில் விளையாடிவிட்டேன். இதற்குப் பிறகு மற்றவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். நேர்மையாகக் கூற வேண்டுமெனில் நான் களைப்படைந்து விட்டேன். இது மிகவும் கடினமான முடிவுதான். நீண்ட சிந்தனைக்குப் பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். ஒழுக்கமான கிரிக்கெட்டை விளையாடும் போது ஓய்வு பெற விரும்பினேன்.

ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிரான அபார வெற்றிக்குப் பிறகே இதுதான் ஓய்வு பெற சரியான தருணம் என்று உணர்கிறேன். தென் ஆப்பிரிக்காவுக்காக எப்போது, எங்கு எந்த வடிவத்திலும் விளையாட வேண்டும என்பதை நான் தீர்மானித்து முடிவெடுக்க முடியாது. அது சரியானதல்ல. எனக்கு ஆதரவு அளித்த தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள், பயிற்சியாளர்கள், அவரது உதவியாளர்கள் ஆகியோருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் வாழ்நாள் முழுதும் என்னுடன் விளையாடிய வீரர்களுக்கும் நன்றி. இவர்களது ஆதரவின்றி என்னால் பாதி வீரராகக் கூட உருப்பெற்றிருக்க முடியாது.

தொழில் முறை போட்டிகளில் விளையாடி சம்பாதிக்கும் நோக்கத்தினால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை. இது சம்பாதிப்பது பற்றியது அல்ல, என்னை இயக்குவதற்கான ஆற்றல் தீர்ந்து விட்டது என்பது பற்றியதாகும். நகர்ந்து செல்வதற்கு இதுவே சரியான நேரம் என உணர்கிறேன். அனைத்தும் முடிவுக்கு வர வேண்டியதுதான். உலகம் முழுதும் உள்ள ரசிகர்கள், தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் என்னிடம் காட்டிய பெருந்தன்மைக்கு நன்றி. அயல்நாடுகளில் விளையாடும் திட்டம் இல்லை. ஆனாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் டைட்டன்ஸ் அணிக்கு தொடர்ந்து ஆடுவேன் என நம்புகிறேன். டுபிளெஸ்ஸிஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் மிகப்பெரிய ஆதரவாளராக நான் இருப்பேன். இவ் வாறு டிவில்லியர்ஸ் உருக்கமாக வீடியோவில் பேசியுள்ளார்.

‘மிஸ்டர் 360 டிகிரி’ என கிரிக்கெட் உலகில் புகழப்பட்ட மிகச்சிறந்த அதிரடி வீரரான டி வில்லியர்ஸ் திடீரென ஓய்வு முடிவை அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முழங்கை காயத்தால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் விளையாடவந்த டிவில்லியர்ஸ் ஜிம்பாப்வேவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அதன் பின்னர் உள்நாட்டில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான ஆட்டத்தை விளையாடினார்.

ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணிக்காக அவர் சிறந்த பங்களிப்பை இந்த சீசனில் வழங்கியிருந்தார். இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றிருப்பது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



சராசரி 50

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவிலும் சேர்த்து 420 ஆட்டங்களில் விளையாடி உள்ள டி வில்லியர்ஸ் 20 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதில் 47 சதங் கள் அடங்கும். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக் கெட் போட்டி என இரண்டிலும் தற்கால பேட்ஸ்மேன்களில் சராசரி 50-க்கு மேல் வைத்துள்ள ஒருசில பேட்ஸ்மேன்களில் டி வில்லியர்ஸும் ஒருவர்.

சாதனைகள்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 16 பந்துகளில் அரை சதம், 31 பந்துகளில் சதம், 64 பந்துகளில் 150 ரன்கள் என மூன்று விதமான சாதனைகளை படைத்துள்ளார் டி வில்லியர்ஸ். ஐசிசி-யின் சிறந்த வீரருக்கான விருதை அவர், 2010, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் வென்றிருந்தார்.

2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் கிரேம் ஸ்மித் கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் டி வில்லியர்ஸ் பொறுப்பேற்றார். இதன் பின்னர் ஹசிம் ஆம்லா டெஸ்ட் கேப்டன் பதவியை துறந்த பின்னர் அந்த வடிவத்துக்கும் கேப்டனாக மாறினார் டி வில்லியர்ஸ். ஆனால் முழங்கை காயம் காரணமாக 2016-ல் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் அதன் பின்னர் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார்.

பெரிய அளவிலான இழப்பு

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைவர் கிறிஸ் நென் ஸானி கூறும்போது, “அனைத்து கால சிறந்த வீரர்களில் டி வில்லியர்ஸும் ஒருவர். தனது திறமையான ஆட்டத்தால் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருந்த அவர், நவீன கால பேட்டிங்குக்கு தகுந்தபடி ஆட்டத்தில் புதுமைகளையும் புகுத்தி புதிய நிலைகளுக்கு கிரிக்கெட்டை எடுத்துச் சென்றார்.அவர் செல்வது பெரிய இழப்புதான்” என்றார்.

மிஸ்டர் 360 டிகிரி

பாரம்பரிய மற்றும் மரபுவழியில்லாத ஷாட்களை சரியான கலவையாக கொண்டு விரைவாக ரன் குவிக்கும் திறனாலும், மைதானத்தின் அனைத்து பகுதிக்கும் பந்தை விளாசும் தன்மையை டி வில்லியர்ஸ் கொண்டிருந்ததால் அவரை, கிரிக்கெட் வல்லுநர்கள் ‘மிஸ்டர் 360 டிகிரி’ என அழைத்தனர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவிரைவு அரை சதம், அதிவிரைவு சதம், அதிவிரைவு 150 ரன்கள் என மூன்று சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ள டி வில்லியர்ஸ் ஐசிசியின் ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களுக் கான தரவரிசையில் 2-வது இடத்தை பிடித்தபடி கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய் துள்ளார்.

டொனால்டு அதிர்ச்சி

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஆலன் டொனால்டு தனது டுவிட்டர் பதிவில், “டி வில்லியர்ஸ் ஓய்வு முடிவை கேள்விப்பட்டதும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதுதான் வாழ்க்கை. நகர்வதற்கு இது சிறந்த தருணம் என்று உணர்ந்து விட்டார். அபாரமான மேட்ச் வின்னிங் ஆட்டங்கள், திறமை யான கேப்டன்சி, அனைத்திற்கும் மேலான அடக்கம், பணிவு ஆகியவற்றுக்கு நன்றி ஏபிடி” என தெரிவித்துள்ளார்.

சென்னை G பிரசாத் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...