தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 26 ஏப்ரல், 2018

இந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் !!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிராக நேற்றிரவு நடந்த போட்டியில் பெங்களூர் றோயல் சல்லெஞ்சர்ஸ் அணி பந்துவீச நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதை அடுத்து அணியின் தலைவர் விராட் கோலிக்கு 12 லட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

IPL விதிகளின் பிரகாரம் 200 நிமிடங்களுக்குள் 20 ஓவர்களை வீசி முடிக்காவிடில் அபராதம், தண்டனை ஆகியன விதிக்கப்படவேண்டும். எனினும் கோலியின் அணி RCB இவ்வாறு நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட காரணத்தினாலேயே இவ்வளவு குறைந்த தொகையுடன் இந்தத் தண்டனை முடிந்திருப்பதாக IPL நிர்வாகம் அறிவித்துள்ளது.

12 லட்சம் ரூபாய் என்பது IPLஇல் புழங்கும் கோடிக் கணக்கான ரூபாய்களோடு ஒப்பிடும்போது சிறுதொகை தான். ஆனால் அடுத்தமுறை இப்படியான தவறு நிகழும்போது அது இன்னும் பெரிய அபராதம் மற்றும் போட்டித் தடை ஆகியன விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...