தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

புதன், 28 மார்ச், 2018

வோர்னரின் இடத்தில் இலங்கை அதிரடி வீரர் குசல் ஜனித் பெரெரா ? #IPL2018

அவுஸ்திரேலியாவினால் தடை செய்யப்பட்டுள்ளதால், இம்முறை IPL இல் விளையாடும் வாய்ப்பையும் இழந்துள்ள அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் உப தலைவர் டேவிட் வோர்னருக்குப் பதிலாக இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரெராவை இணைப்பது பற்றி தற்போது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த நான்கு பருவகாலங்களிலும் (2014 - 2017) டேவிட் வோர்னரே SunRisers Hyderabad அணியின் சார்பில் கூடிய ஓட்டங்கள் பெற்றவராக விளங்கினார்.
அத்துடன் இம்முறையும் தலைமை தாங்கவிருந்தார்.

எனவே அவரது இடத்தை நிரப்பும் வகையில் இப்போது சிறப்பான ஓட்டக்குவிப்பில் இருக்கும் குசல் ஜனித்தை அணுகியுள்ள சன்ரைசர்ஸ் முகாமைத்துவம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முடிவையும் எதிர்பார்த்துள்ளது.

வோர்னருக்குப் பதிலாக இன்னும் புதிய தலைவரும் அறிவிக்கப்படவில்லை.


வ.சோழன் - யாழ்.நல்லூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...