Latest Updates

6/recent/ticker-posts

நிரபராதி என்று BCCI விடுவித்த ஷமி - பல பெண்களுடனான தகாத உறவை ஒத்துக்கொண்டார் !

சர்ச்சைகளின் நாயகனாக இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி தொடர்ந்து வருகிறார்.
படம் : Free Press Journal
அண்மையில் மனைவியினால் போலீஸில் முறைப்பாடு செய்யப்பட்ட இவரைக் குற்றமற்றவர் என்று BCCI - இந்தியக் கிரிக்கெட் சபை தீர்மானித்து ஊதிய ஒப்பந்தமும் வழங்கியிருந்தது.
எனினும் அடுத்த நாளே கார் விபத்தில் சிக்கினார் மொஹமட் ஷமி.
கடந்த நாட்களில் இந்தப் புகார்கள் + சர்ச்சைகளால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த ஷமி அதிலிருந்து மீண்டு வர டெஹ்ராடூனில் உள்ள தனது வழக்கமான பயிர்சியிடமான அபிமன்யு கிரிக்கெட் அகடமிக்கு பயிற்சிக்காக சென்றிருந்தார்.
 பயிற்சி நிறைவடைந்து டெஹ்ராடூனில் இருந்து டெல்லி திரும்பியபோது அவரது கார் ஒரு டிரக் வண்டியில் மோதி விபத்துக்குள்ளானது. எனினும் தலையில் சிறிய காயங்களோடு அவர் தப்பித்திருந்தார்.
இன்று காலை ஊடகங்களுக்கு வழங்கிய பெட்டியில் ஷமி மேலும் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மனைவிக்குத் தெரியாமல் நிறைய பெண்களுடன் தொடர்பில் இருந்தது உண்மை தான் என இதில் மொஹமட் ஷமி பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மொஹமட் ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஷமியின் மனைவி ஹசின் ஜகான் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்த நிலையில், அவர் இந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.
முக்கியமாக பாகிஸ்தானை சேர்ந்த அலீஷ்பா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவரை பார்க்கவே தென் ஆபிரிக்கக் கிரிக்கெட் தொடரை முடித்துவிட்டு டுபாய் சென்றதாகவும் அவர் இப்போது ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும், மனைவி சொன்னது போலவும் பல ஊடகங்களில் வெளியான தகவல்கள் போலல்லாமலும் அலீஷ்பாவிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பணம் வாங்கியதில்லை என அவர் தெரிவித்துள்ளார். 
சூதாட்டக் குற்றச்சாட்டு சந்தேகம் என்று இது கருதப்பட்டாலும், குறித்த விடயம் அவரது குடும்ப பிரச்சனை என்பதால் இதுகுறித்து இந்தியக் கிரிக்கெட் சபை எவ்வித நடவடிக்கையும் எடுக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தனிப்பட்ட ஒழுக்கக் குறைபாடு என்னும் வகையில் BCCI ஷமி மீது நடவடிக்கை எடுத்திருக்கவே வேண்டும் என்று அதிருப்திகள் எழுந்துள்ளன.

சென்னை G.பிரசாத் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்