தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

புதன், 31 அக்டோபர், 2018

இறுதி ஒருநாள் போட்டியில் தோனி இல்லை ??

இந்தியாவுக்கு எதிராக தடுமாறும் என்று கருதப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி.  இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வருகிறது
கடைசியாக நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

 எனினும் 2-1 என்ற கணக்கில்  இந்திய  அணி  முன்னிலை பெற்றிருந்த போதும் மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு தொடர் முழுவதும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இறுதி மற்றும் 5வது ஒருநாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இதில் MS தோனி பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஏனெனில் நான்காவது ஒரு நாள் போட்டியில் தோனி துடுப்பாடிய போது மேற்கிந்தியத் தீவுகளின் களத்தடுப்பாளர் ஒருவர் வீசிய பந்தினால் மணிக்கட்டு உபாதை ஏற்பட்டது.  இதன் காரணமாக, தோனியின் சிகிச்சைக்காக பத்து நிமிடம் ஆட்டம் தடைப்பட்டது.

அதன் பின்னர் அவருக்கு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு ஆட்டமிழக்கும் வரை முழுவதுமாக ஆடினார். இந்நிலையில் இன்று வரை அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று தெரிகிறது.

அவர் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால் நாளைய 5வது போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

மேலும் நேற்று  விமான நிலையத்திற்கு வந்திருந்தபோது கூட அவருக்கு  கையில் காயம் சரியான வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தாண்டி அவரது கையில் கட்டுப்போட்டிருந்தார். இதனால் இந்த காயம் இன்னும் சரியாகவில்லை என்று தென்படுகிறது.   
எனினும் இதுவரை நாளைய அணி பற்றி எந்தவொரு உறுதியான தகவலும் இந்திய முகாமிலிருந்து வரவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...