தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

புதன், 12 செப்டம்பர், 2018

10 புள்ளிகளைப் பறிகொடுத்த இந்தியாவும், பத்தாம் இடத்திலேயே விடைபெற்ற குக்கும் !!

இங்கிலாந்தின் 4-1 என்ற அபாரமான டெஸ்ட் தொடர் வெற்றியானது தரப்படுத்தலில் முதலாமிடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு முதலாமிடத்தில் இருந்து எந்த ஒரு வீழ்ச்சியையும் தராவிடினும் பத்து தரப்படுத்தல் புள்ளிகளைக் குறைத்துள்ளது.

இதன்மூலம் இரண்டாம் இடத்திலுள்ள தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளை விட 9 புள்ளிகள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி இந்தத் தொடர் வெற்றி மூலம் 8 புள்ளிகளை அதிகமாக பெற்றுள்ளது.இதன் மூலம் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

துடுப்பாட்டத்தில் விராட் கோலியும் பந்துவீச்சில் ஜிம்மி அண்டர்சனும் தத்தம் முதலாமிடங்களைத் தக்க வைத்துள்ள போதிலும் இருவருக்குமே சற்று புள்ளிக்குறைவு ஏற்பட்டுள்ளது.

முதலாமிடத்திலுள்ள விராட் கோலிக்கும் இரண்டாமிடத்திலுள்ள (தற்போது தடைக்குள்ளாகியுள்ள) ஸ்டீவ் ஸ்மித்துக்கும் இடையில் தற்போது ஒரேயொரு புள்ளி மட்டுமே வித்தியாசம்.

எனினும் நேற்றைய டெஸ்ட் போட்டியோடு தனது டெஸ்ட் ஓய்வினை அறிவித்திருந்த அலஸ்டயர் குக் அவர் பெற்ற 71 மற்றும் 147 ஓட்டங்களுடன் 11 ஸ்தானங்கள் மேலேறி பத்தாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அண்மைக்காலங்களில் சற்று சராசரிக் குறைவை சந்தித்திருந்த குக் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது, இறுதி இன்னிங்சில் சதம்,தரப்படுத்தல் உயர்வு என்பவற்றோடு விடைபெறுகிறார்.

சகலதுறை வீரர் பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தில் பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன் இருக்கிறார்.

முழுமையான தரப்படுத்தல்கள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...