கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் - மீண்டும் கிரிக்கெட் சூதாட்டப் பூதம் ?

சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் சிலர் பற்றியும் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகள் பற்றியும் சர்ச்சை + சந்தேகப் புயல்களைக் கிளப்பிவிட்ட அல் ஜஸீரா தொலைக்காட்சி இம்முறை அவுஸ்திரேலிய வீரர்களை மட்டும் குறிவைத்து புதிய பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிரிக்கெட் பந்தயக்காரர்கள் , சூதாட்டக்காரர்கள் ஆகியோருடன் அவுஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் பலருக்கு இருந்த ரகசியத் தொடர்புகள் பற்றி அம்பலப்படுத்தப்போவதாக அல் ஜஸீரா மீண்டும் ஒரு புதிய பதற்றத்தைக் கிரிக்கெட் உலகில் ஆரம்பித்துள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அல் ஜஸீரா வெளியிட்டுப் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்த அல் ஜஸீரா வெளியிட்ட முழுமையான ஆவணப்படம் :
Cricket’s Match Fixers - Al Jazeera Investigations - Shocking Video
ஆவணப்படத்திலும் ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் குறித்த டெஸ்ட் போட்டியில் வேண்டுமென்றே மந்த கதியில் ஆடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அந்தப் போட்டியில் சதமடித்திருந்த கிளென் மக்ஸ்வெல் இந்த சந்தேக வலையில் பிரதான நபராக மாறியிருந்தார்.
எனினும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா அந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என மறுத்திருந்தது.

இப்போதும் 2011 காலகட்டத்தில் ஆஷஸ், உலகக்கிண்ணம், அதைத் தொடர்ந்த அவுஸ்திரேலியாவின் பங்களாதேஸ்,  இலங்கை,ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணங்கள், அதன் பின் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இந்தியா மற்றும் நியூ சீலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்கள் எல்லாம் இந்த அல் ஜஸீராவின் சந்தேகத்தில் அடங்கியுள்ளது.

இது பற்றி விசாரிக்கப்படும் என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா தெரிவித்தாலும் கூட இது பற்றிய உண்மைத்தன்மையை சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்றுக்கொள்ளும்வரை நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

முன்னைய குற்றச்சாட்டின்போதும் சர்வதேச கிரிக்கெட் சபை கேட்ட ஆதாரக் காணொளிகளை அல் ஜஸீரா வழங்க மறுத்திருந்தது.

இந்த சர்ச்சை தொடர்பான முன்னைய, தொடர்புப்பட்ட பதிவுகள் :






கருத்துரையிடுக

புதியது பழையவை