தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

ஞாயிறு, 27 மே, 2018

ஷேன் 'செஞ்சுரி' வொட்சன் ! சென்னை #IPL2018 சம்பியன் !!


ஷேன் வொட்சனின் அபார சதத்துடன் 178 என்ற பெரிய இலக்கை இரண்டே விக்கெட்டுகளை மட்டும் இழந்து துரத்தி தன்னுடைய மூன்றாவது IPL கிண்ணத்தை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் IPLக்குத் திரும்பிய தோனியின் தலைமையிலான CSK இந்த IPLஇல் நான்காவது தடவையாகவும் சன்ரைசர்ஸ் அணியை வெற்றிகொண்டது.

நாணய சுழற்சியில் வென்று தோனி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைத் துடுப்பாட அனுப்பியிருந்தார்.
வில்லியம்சன் 47, யூசுப் பதான் ஆட்டமிழக்காமல் 45.

பெரிய இலக்காகத் தென்பட்ட 179, வொட்சன், ரெய்னா ஆகியோரின் சத இணைப்பாட்டத்தினால் இலகுவாக மாறியது.
சுரேஷ் ரெய்னா 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

வொட்சன் இந்த IPLஇல் தன்னுடைய இரண்டாவது சதத்தைப் பெற்றார்.
8 சிக்ஸர்கள், 11 நான்கு ஓட்டங்களுடன் 57 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 117.
போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் ஷேன் வொட்சன் தெரிவானார்.

மஞ்சள் சீருடைகளின் விசில் போடு கொண்டாட்டத்துடன் தோனி மற்றும் குழுவினர் மும்பாயில் IPL வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.

நாளை வெற்றிக் கிண்ணத்தை சென்னை ரசிகர்களுக்குக் கையளிக்கச் சென்னைக்குப் புறப்படுகின்றனர்.

1 கருத்து:

  1. வட்சனின் நேற்றைய தாண்டவம் சென்னைக்கு வெற்றியைத் தேடியது நண்பரே... டோனி களத்தில் இறங்கவில்லை என்பது சற்று ஏமாற்றம்தான்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...