தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 26 மார்ச், 2018

காயங்கள், உபாதைகளால் அல்லலுறும் ஐபிஎல் பிரபல வீரர்கள் - #IPL2018

இன்னும் இரு வாரங்களில் ஐபிஎல் 11ஆவது சீசன் மிக மிக கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ள நிலையில் இம்முறை விளையாடவுள்ள ஐபிஎல் அணிகளின் பிரபலவீரர்கள் தொடர்ச்சியாகக் காயங்களுக்கு உட்பட்டு வருவதால் ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்திற்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தி வருகின்றது.

அந்தவகையில் கொல்கத்தா நைட்ஸ் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், ராஐஸ்தான் றோயல்ஸ் ஆகிய அணிகளின் வீரர்கள் பலர் காயத்திற்கு உட்பட்டு இந்த IPL 2018 - ஐபிஎல் சீசனில் விளையாடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் அணிகளின் ஒன்றான கொல்கத்தா நைட்ஸ் ரைடர்ஸ் அணி தான் இதன் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட அணியாகத் தெரிகிறது.
இவ்வணியில் இம்முறையும் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகளின் சகலதுறைவீரரான அன்ரே ரசல் வலதுகையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் விளையாட முடியாதுள்ளது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதே மேற்கிந்தியதீவுகளின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைனும் உபாதைக்கு உட்பட்டுள்ளார். அதோடு அவுஸ்ரேலியாவின் அதிரடி துடுப்பாட்டவீரர் கிறிஸ் லின்னும் உபாதைக்கு உட்பட்டுள்ளார். இந்த மூவரின் இழப்பும் கொல்கத்தா அணிக்கு மிக மிகப் பெரும் இழப்பாக இந்த ஐபில் சீசனில் அமையும் .
பதினொருவரில் இடம்பெறும் உறுதியான நால்வராக இவர்கள் எப்போதுமே இருக்கக்கூடியவர்கள்.
இவர்களுக்கான பதில் வீரர்களை கொல்கத்தா அணி தற்போது தீவிரமாக தேடி வருகின்றது. மேலும் அவுஸ்ரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜோன்சனும் இந்த ஐபிஎல் விளையாடமாட்டார் என்ற செய்தியும் தற்போது கசிந்து வருகின்றது. மேலும் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இம்முறை இடம்பெற்ற அவுஸ்ரேலியாவின் வேகப்பந்துவீச்சாளரான நேதன் கோல்ட்டர்நைலும் காயத்திற்குட்பட்டுள்ளதால் இந்த சீசனில் விளையாடமுடியாது போயுள்ளது. இது பெங்களூர் அணிக்கு மிகப் பெரும் இழப்பாக கருதப்படுகின்றது. இவருக்கு பதிலாக பெங்களூர் அணிநிர்வாகம் பதில்வீரராக நீயூசீலாந்தின் பிரபல சகலதுறைவீரரான கோரி அண்டர்சனை அணியில் இணைத்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இரு வருடத்தடைக்கு பின்னர் இந்த சீசனில் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இம்முறை இணைத்து கொள்ளப்பட்ட நீயூசீலாந்தின் அண்மைக்கால சகலதுறைவீரர் மிட்சல் சான்ட்னருக்கு காலில் ஏற்பட்டிருக்கும் உபாதை காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை இடம்பெற்று அதன் பின்னர் 9 மாதங்கள் ஒய்வில் இருக்கவேண்டும் என்பது காரணமாக சென்னை அணியில் இம்முறை விளையாடமுடியாது என்பதால் ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு பதிலாக மாற்றுவீரர் ஒருவரை தெரிவு செய்யும்படி சென்னை அணி நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாற்றுவீரரை தேடிக் கொண்டிருக்கின்றது. மேலும் இந்திய சகலதுறைவீரர் ரவீந்தீர ஜடேஜாவும் உபாதைக்குட்பட்டு தற்போது குணமடைந்துவிட்டார் எனச் சொல்லப்படுகின்றது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் பிரபலவீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. அவுஸ்ரேலியாவின் வேகப்பந்துவீச்சாளரான ஜெசன் பெஹ்ரேண்டோப் தான் காயத்திற்கு உட்பட்டதாக சொல்லப்படுகின்றது. மேலும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் இம்முறை இணைத்துக்கொள்ளப்பட்ட 19வயதிற்குட்பட்ட மேற்கிந்தியதீவுகள் அணியின் நட்சத்திர பந்துவீச்சு சகலதுறைவீரர் - இங்கிலாந்தின் எதிர்கால வீரர் என்று கருதப்படும் ஜோஃப்ரா ஆர்ச்சரும் உபாதைக்குட்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. எனவே ஐபிஎல் 11 ஆவது சீசன் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ளநிலையில் ஐபிஎல் அணிகளின் பிரபலவீரர்கள் காயத்திற்குட்பட்டு வருவது ரசிகர்களுக்கு மனவருத்ததை அளிப்பதாகவுள்ளது.
தர்ஷன் யோகேஸ்வரன் - இன்பர்சிட்டி, பருத்தித்துறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...