Latest Updates

6/recent/ticker-posts

மீண்டும் எப்போதுமே அவுஸ்திரேலிய அணிக்கு விளையாட முடியாது போகலாம் - டேவிட் வோர்னர்

மீண்டும் ஒரு தடவை அவுஸ்திரேலிய அணிக்கு விளையாடும் வாய்ப்புத் தனக்கு இல்லாமலே போய்விடலாம் என்று அழுகையுடன் தெரிவித்தார் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் உப தலைவர் டேவிட் வோர்னர்.

தடை செய்யப்பட்ட மூன்று வீரர்களில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இறுதி நபரான வோர்னர் இன்று தனது விளக்கத்தை வழங்கிய போது இதனை மன்னிப்புடன் குறிப்பிட்டார்.

உப தலைவராக தன்னுடைய கடமையிலிருந்து தவறியதாகக் குறிப்பிட்ட வோர்னர், இந்த மோசடியில் தன்னுடைய பங்களிப்பு குறித்து மனவேதனை அடைவதாகவும் தெரிவித்தார். இந்த செயலினால் தனக்கு வழங்கப்பட்ட தடையினால் தனக்கு மீண்டும் எப்போதுமே அவுஸ்திரேலிய அணிக்கு விளையாடமுடியாது போகலாம் என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.

டேவிட் வோர்னருக்கு இப்போது 31 வயது என்பதுடன் இந்த விவகாரத்தின் பின்னர் அநேக அவுஸ்திரேலிய வீரர்கள் அவரையே குற்றஞ்சாட்டியிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்மித் மற்றும் வோர்னருக்கு தலா ஓராண்டு காலத் தடை விதிக்கப்பட்டதுடன், பான்க்ரொஃப்ட்டுக்கு 9 மாத காலத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வ.சோழன் - யாழ்.நல்லூர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்