Latest Updates

6/recent/ticker-posts

பதவி விலகுகிறார் பயிற்றுவிப்பாளர் லீமன் !

மூன்று அவுஸ்திரேலிய வீரர்களின் தடை, உலகம் முழுவதும் சர்ச்சை என்ற நிலையில் கிரிக்கெட் அவுஸ்திரேலிய விசாரணையில் இந்தப் பந்து சேதப்படுத்தல் மோசடி விவகாரத்தில் எந்த சம்பந்தமும் இல்லாத 'நிரபராதி' என்று குறிப்பிடப்பட்ட பயிற்றுவிப்பாளர் டரன் லீமன் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

லீமனுக்குத் தெரியாமல் இந்த சதித்திட்டம் நடந்திராது என்றும் லீமன் திட்டமிட்டுத் தப்பவைக்கப்பட்டிருக்கிறார் என்றும் கடுமையான விமர்சனங்களும் அனைத்துத் தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

"நடைபெற்றுள்ள சம்பவங்களின் பின்னணியில் தொடர்ந்தும் இந்தப் பாதையில் பயணிப்பது மிகவும் கடினமானது. இந்த இளைய அணியை சிறப்பான முறையில் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
குற்றம் இழைத்ததை ஏற்றுக்கொண்ட இளையவர்கள் மூவரையும் அனைவரும் மன்னித்து ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் பிரதானிகளுடன் கலந்துரையாடியே இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்"
என்று குறிப்பிட்ட லீமன் மிக உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப்பட்டார்.

ஸ்மித்தின் அழுகையுடனான பேட்டியின் சில மணிநேரங்களில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்