தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 3 மே, 2018

முன்னாள் வீரர் பயிற்றுவிப்பாளர் ஆனார் ! அவுஸ்திரேலியா அறிவிப்பு.

அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் ஜஸ்டின் லங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜஸ்டின் லங்கர் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை இன்று  உத்தியோகபூர்வமாக அறிவத்துள்ளது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்கு அவுஸ்திரேலிய அணி முகங்கொடுத்ததைைத் தொடர்ந்து, அணியின் தலைமைைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட டரன் லீமன் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.

பின்னர் அணிக்கான புதிய பயிற்றுவிப்பாளரை நியமிப்பதில் கவனம் செலுத்திய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, உள்ளூர் அணிகளான மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் பெர்த் ஸ்கோர்ச்சஸ் அணிகளின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் ஜஸ்டின் லங்கரை நியமித்துள்ளது.

ஜஸ்டின் லங்கர் நான்கு வருட ஒப்பந்தத்தில் அவுஸ்திரேலிய அணியுடன் இணைந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...