Latest Updates

6/recent/ticker-posts

ஸ்மித், வோர்னருக்கு ஒரு வருடத் தடை ! - கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் கடுமையான நடவடிக்கை

பந்தை சேதப்படுத்தி முறைகேடு செய்யமுயன்ற குற்றத்துக்காக அவுஸ்திரேலியாவின் பதவி நீங்கிய தலைவர் ஸ்டீவ் ஸ்மித், அவரது உப தலைவராக இருந்த டேவிட் வோர்னர் ஆகியோருக்கு தலா ஒரு வருட கிரிக்கெட் விளையாடும் தடையும், தலைமை தாங்குவதற்கு இரண்டு வருடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதோடு, நேரடியாக இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட கமெரோன் பன்க்ரொஃப்டுக்கு 9 மாதகாலத் தடையும் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவினால் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்த ஒரு வருடத் தடை பற்றி கிரிக்கெட் உலகமே அதிர்ந்து போயுள்ள நிலையில், ஸ்மித் IPL போட்டிகளில் பங்குபற்றப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

இந்த விசாரணை முடிவுகள் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்தத்தடையின் விளைவாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா நடத்தும் உள்ளக, பிராந்திய மற்றும் Big Bash League போட்டிகளிலும் இவர்கள் விளையாட முடியாது. எனினும் இங்கிலாந்தின் பிராந்திய, மற்றும் உள்ளூர் கழக மட்டப் போட்டிகள், இதர பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திக்கிடைத்த தகவலாக BCCI - இந்தியக் கிரிக்கெட் சபை கிரிக்கெட் அவுஸ்திரேலியாவினால் தடை செய்யப்பட்டிருப்பதால் IPL இல் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்