தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

சனி, 4 ஆகஸ்ட், 2018

கோலியின் தனி நபர் போராட்டம் வீண் ! இங்கிலாந்து அணிக்கு முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி.

இரண்டாவது இன்னிங்க்சிலும் அரைச்சதம் பெற்றும் இந்திய அணித்தலைவர் விராட் கோலியினால்  இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியாமல் போனது. 194 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டும் இன்றைய நாளில் 84 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையிலும் ஆரம்பித்த இந்தியாவின் வெற்றி விராட் கோலியிலேயே பெருமளவில் தங்கியிருந்தது.

கோலியின் முதலாம் இன்னிங்ஸ் சதம் ஏற்படுத்திய தாக்கம் இரண்டாம் இன்னிங்சிலும் வெற்றி இலக்கை இந்தியா கடக்க உதவிடும் என்று நம்பப்பட்டது.

அரைச்சதம் பெற்று உறுதியாக நின்று ஆடிக்கொண்டிருந்த கோலியை பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கச் செய்ததுடன் இங்கிலாந்து தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தி இந்தியாவை வீழ்த்தியது. ஸ்டோக்ஸ் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் கோலி இரண்டு இன்னிங்சிலும் மொத்தமாக 200 ஓட்டங்களைப் பெற்ற அதே நேரம், ஏனைய பத்து வீரர்களும் சேர்ந்து இரண்டு இன்னிங்சிலும் 214 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டார்கள்.

இந்திய அணியின் பந்துவீச்சு இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக செய்து இங்கிலாந்து அணியை மடக்கியும் கூட, இந்தியாவின் மோசமான துடுப்பாட்டத்தால் அரிய வெற்றி ஒன்றுகைகூடாமல் போனது.

சகலதுறை வீரராக இப்போட்டியில் பிரகாசித்த சாம் கரன் போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

துடுப்பாட்டத்தில் 87 ஓட்டங்கள்.
விக்கெட்டுக்கள் 5.
இங்கிலாந்து சார்பாக போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவாகிய இளவயது வீரர் இவர் தான்.

ஆனாலும் இந்தப் போட்டியில் விராட் கோலியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது என்பது அனைத்து ரசிகரும் ஏற்றுக்கொள்ள  வேண்டிய ஒன்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...