தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

கெயில் அசுர சதம் ! பஞ்சாப் அணிக்கு அபார வெற்றி ! சன்ரைசர்ஸ் அணிக்கு முதலாவது தோல்வி - #KXIPvSRH #IPL2018

கிறிஸ் கெயில் அடித்த அசுர சதத்தின் உதவியுடன் சண்டிகாரில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு முதலாவது தோல்வியை வழங்கியது கிங்ஸ் இலெவன் பஞ்சாப் அணி.

இதற்கு முதல் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த சன்ரைசர்ஸ் அணிக்கு இது முதலாவது தோல்வி.

இந்த IPL தொடரின் முதலாவது சதத்தை இன்று நாலா திசைகளிலும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 59 பந்துகளில் கடந்தார் கெயில்.
63 பந்துகளில் 11 சிக்ஸர்களுடன் 104 ஓட்டங்கள்.

இதில் உலகின் தற்போதைய முன்னணி சுழல் பந்துவீச்சு நாயகன் ரஷீத் கானின் ஒரு ஓவரில் நான்கு சிக்ஸர்களுடன் கெயில் 27 ஓட்டங்களைப் பெற்றார்.
பஞ்சாப் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 193.

பதிலளித்த சன்ரைசர்ஸ் அணிக்கு தவான் முதல் பந்திலேயே காயமுற்று வெளியேறியது மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. ஆரம்பம் முதல் வேகமின்றிய துடுப்பாட்டம் இறுதியாக 15 ஓட்டங்களால் தோல்வி கிட்டியது.

அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் அரைச் சதங்களைப் பெற்றுக்கொண்டனர். எனினும் மந்த நிலையிலேயே இவர்களது ஆட்டங்கள் அமைந்தன.

அஷ்வினும் மோஹித் ஷர்மாவும் தம் நான்கு ஓவர்களில் ஐம்பது ஓட்டங்களைக் கொடுத்தாலும், பரிந்தர் ஸ்ரான், அன்றூ டை, முஜீப் ரஹ்மான் ஆகியோர் கட்டுப்பாடாகப் பந்துவீசி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மடக்கினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக கிறிஸ் கெயில் தெரிவானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...